வட கொரியாவை குறிவைத்து ஒரு தனிப்படை ஒன்றை அமைத்துள்ளது
அமெரிக்காவின் உள்நாட்டு புலனாய்வு துறையை எப்.பி.ஐ கவனித்து வரும் நிலையில். வெளிநாட்டு புலனாய்வை சி.ஐ.ஏ கவனித்து வருகிறது. இதுவரை காலமும் வடகொரியாவை அடக்க என அமெரிக்கா தனது ராணுவத்தை, கப்பல் படையை மற்றும் விமானப் படையை தான் அங்கே அனுப்பி வைத்தது. ஆனால் உளவுத்துறையை முடிக்கிவிடவில்லை.
ஆனால் சற்று நேரத்திற்கு முன்னதாக, அமெரிக்க உளவுதுறையான சி.ஐ.ஏ வெளிப்படையாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் தாம் ஒரு தனிப்படை ஒன்றை அமைத்துள்ளதாகவும். அது வட கொரியாவை குறிவைத்து பல தகவல்களை திரட்டி தமக்கு கொடுக்கும் என்பதே ஆகும். அதாவது சி.ஐ.ஏ பொறுத்தவரை அவர்கள் இனித் தான் தமது ஏஜண்டுகளை வட கொரியாவுக்கு அனுப்பப்போவது இல்லை. அவர்களது ஏஜண்டுகள் ஏற்கனவே வட கொரியாவில் எங்கேயாவது இருப்பார்கள்.
ஆனால் அவர்களை இதுவரை காலமும் சி.ஐ.ஏ பாவித்திருக்காது. இனி அதனை ஆரம்பித்துவிட உள்ளார்கள். இந்த அறிக்கை ஊடாக , வடகொரியாவை சற்று திகைப்பில் ஆழ்த்தியுள்ளது சி.ஐ.ஏ. ஆனால் இதற்கு வடகொரிய அதிபர் மிரளுவாரா ? அது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
0 comments:
Post a Comment