கத்தரிடம் பிரதானமாக கேட்க வேண்டிய காரியம் என்ன?

கத்தரிடம் பிரதானமாக கேட்க வேண்டிய காரியம் என்ன

Blogger இல் விளம்பரங்களை உருவாக்க மென்பொருள்

விளம்பர Bannerகளை உருவாக்க நினைப்பவர்களுக்கு இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும்.ஏனென்றால் இதில் பல Template கள் இருக்கின்றன அதுவும் அளவு ரீதியாகவும் (728 x 90, 468 x 60) வகை (Category) ரீதியாகவும்  இருக்கிறது.நமக்கு எந்த அளவில் வேண்டுமானாலும் தெரிவு செய்து Banner களை உருவாக்க முடியும்.இப்படி நாம் உருவாக்கிய  Bannerகளை 

SWF
GIF
AVI
JPG
PNG
TIFF
BMP

போன்ற Format இற்கு மாற்றிக்கொள்ளவும் முடியும்.

 Download செய்வதற்கு

http://www.bannerdesignerpro.com/download/BannerDesignerPro.EXE

http://www.mediafire.com/?5y0u2kt3xq76jd8


இதையும் பயன்படுத்தி பாருங்கள. 

Easy GIF Animator 5 pro

இஸ்ரேலும் ஈழத் தமிழரும் பாகம்-5(உண்மையின் தரிசனம்)

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்களை, அழிவுகளைச் சந்தித்த இஸ்ரேலியர்களால் எப்படி தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது? யூதர்களைப் போலவே சொந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஈழத் தமிழர்களாலும் தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ள முடியுமா?
இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன?
இவைகளைப் பற்றிதான் இந்தத் தொடரில் விரிவாக ஆராய்கின்றோம்

இஸ்ரேலும் ஈழத் தமிழரும் பாகம்-4 (உண்மையின் தரிசனம்)

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்களை, அழிவுகளைச் சந்தித்த இஸ்ரேலியர்களால் எப்படி தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது? யூதர்களைப் போலவே சொந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஈழத் தமிழர்களாலும் தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ள முடியுமா?
இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன?
இவைகளைப் பற்றிதான் இந்தத் தொடரில் விரிவாக ஆராய்கின்றோம்

இஸ்ரேலும் ஈழத் தமிழரும் பாகம்-3(உண்மையின் தரிசனம்)

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்களை, அழிவுகளைச் சந்தித்த இஸ்ரேலியர்களால் எப்படி தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது? யூதர்களைப் போலவே சொந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஈழத் தமிழர்களாலும் தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ள முடியுமா?
இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன?
இவைகளைப் பற்றிதான் இந்தத் தொடரில் விரிவாக ஆராய்கின்றோம்

இஸ்ரேலும் ஈழத் தமிழரும் பாகம்-2(உண்மையின் தரிசனம்)

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்களை, அழிவுகளைச் சந்தித்த இஸ்ரேலியர்களால் எப்படி தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது? யூதர்களைப் போலவே சொந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஈழத் தமிழர்களாலும் தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ள முடியுமா?
இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன?
இவைகளைப் பற்றிதான் இந்தத் தொடரில் விரிவாக ஆராய்கின்றோம்

பிரபாகரன் மறு அவதாரம் எடுத்தால் எவரையும் குற்றஞ்சாட்டமுடியாது

தமிழ் சமூகத்தின் மீது நம்பிக்கையின்றி போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் இராணுவத்தினரை தொடர்ந்தும் நிறுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளுமாயின் தலைவர் பிரபாகரன் மறு அவதாரம் எடுத்தால் எவரையும் குற்றஞ்சாட்டமுடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம் சமஷ்டி பிரிவினை அல்ல என்பதை வலியுறுத்தியவர் மத்திய அரசாங்கத்தின் நேரடித்தலையீடுகளால் வடக்கு மாகாணசபை தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தேசத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக எழுத்தாளர் குசால் பெரேராவின் நூல் வெளியீடும் திறந்த கலந்துரையாடலொன்றும் கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றபோது பிரதம பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தேசத்தைக் கட்டியெழுப்புதலும் நல்லிணக்கமும்
தேசத்தை கட்டியெழுப்புதல் தொடர்பாக அவதானம் செலுத்துகையில் இலங்கை என்றொரு தேசமுள்ளது. அதனை கட்டியெழுப்பவேண்டிய தேவை எமக்கு உள்ளது. தேசத்தைக் கட்டியெழுப்புதல் தொடர்பாக நாம் கலந்தாலோசிக்கினறபோதும் நாட்டை கட்டியெழுப்புவது தொடர்பாகவே நாம் தற்போது ஆலோசிக்கின்றோம்.
பல்வேறுபட்ட வேறுபாடுகளுக்கு மத்தியில் நாட்டினை கட்டியெழுப்புவது தொடர்பாக தற்போது இங்கு பேசப்படுகின்றது. இலங்கைத்தேசத்தைக் கட்டியெழுப்புகின்றோம் என்ற நிலைப்பாட்டில் நாம் இணக்கம் கொண்டிருக்கவில்லை.
தேசத்தை கட்டியெழுப்புவதானது ஒரு பாரிய கட்டடமொன்றினை பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் கட்டியெழுப்புவதற்கு சமனானதாகும். அதற்கு பல்வேறு தரப்பினரின் பங்களிப்புக்கள் அவசியமாகின்றன. அதனைப்போன்றே தேசத்தைக் கட்டியெழுப்புதலையும் கூறமுடியும்.
தேசத்தைக் கட்டியெழுப்புதலும் நல்லிணக்கமும் தொடர்பாக நோக்கும்போது சிதைவுகளை கொண்டிருக்கும் கட்டடமொன்றை மீளவும் நிர்மாணிப்பதற்குச் சமமானதாகும்.
ஒரு கட்டடமொன்றில், தவறான திட்டங்கள், கட்டமைப்பு ரீதியான கோளாறுகள் சுரண்டல்கள், இயற்கையான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் சிதைவுகள் ஏற்பட்டிருக்கலாம். அதேபோன்றே எமது தேசத்தைக் கட்டியெழுப்புதலையும் நோக்கவேண்டிய தேவை உள்ளது.
இலகுவான தெரிவாக கட்டடத்தை முழுமையாக அழித்துவிட்டு புதிய புதிய கட்டட வரைஞர்கள் ஒப்பந்தக்காரர்களை வாடகைக்கு அமர்த்தி ஆரம்பத்திலிருந்து கட்டடத்தை அமைக்க முடியும். ஆனால் அதே கட்டட கலைஞர்கள் அதே தவறினை விடுவார்களா, இல்லையா, என்பது தொடர்பில் நாம் எவ்வாறு அறிந்துகொள்ளமுடியும்?
இதன்காரணமாக பிரச்சினைக்கான அடிப்படை காரணங்களேயே முதற்படியாக நாம் ஆராயவேண்டும். பிரச்சினைக்குரிய சரியான காரணங்களை கண்டறியாமலும் தவறுகளை அடையாளம் காணாமலும் எம்மால் தீர்வினை வழங்கமுடியாது. காரணங்களை கண்டறியும் செயற்பாடு மிகவும் நேர்மையானதாக இருக்கவேண்டும்.
எனது நோக்கின் அடிப்படையில் தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கத்தில் மிகவும் அடிப்படை நடவடிக்கையாக நேர்மையான சுயசோதனைகளை மேற்கொள்ளப்படல் வேண்டும்.
சுயசோதனை
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் அடிப்படையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளக்கூடாதென சிங்கள சமூகத்தவர்களின் பெரும்பான்மையானவர்கள் நினைக்கின்றனர். இதேசமயம் அந்த விசாரணைக்குரிய அவசியம் இருப்பதாக பெரும்பான்மையான தமிழ் மக்கள் நினைக்கின்றனர்.
மக்கள் மத்தியில் இருக்கும் துருவமயப்படுத்தப்பட்ட சமூகங்களுடன் நாம் இதனை எதிர்நோக்குகிறோம். சுயசோதனையானது நல்லிணக்கத்திற்கான முதலாவது அடிப்படை நடவடிக்கையாக இருக்கும். இதனை உறுதிப்படுத்துவதற்காக அவசியமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம். எந்தவிதமான பாரபட்சமற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படாத நிலையில் ஆயுத குழுவினர் பூச்சிய இழப்பு போரை நடத்தினார்கள் என்றோ, அனுமதித்த சேதங்களை, இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தார்கள் என்றோ கூறமுடியாது.
1956ஆம் ஆண்டு முதல் இரண்டாம் தர பிரஜைகளை உருவாக்குவதற்கான முதலாவது அரசியலமைப்பு படியாக கருதப்படும் 1972 அரசியலமைப்பு வரை சிங்களமயமாக்கலின் செயற்பாடுகள் தொடர்பில் பெரும்பான்மை சமூகம் மீளாய்வு செய்யவேண்டிய தேவை உள்ளது.
உரிமை மறுப்பு
வடக்கு, கிழக்கு மாகாண சபைகளை குறைத்து மதிப்பீடு செய்தல், திவிநெகும போன்ற சட்டமூலங்கள் மூலம் தமிழ் மக்களை தரப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் காலனித்துவ மாற்றங்களுடாக குடியியல் ரீதியான மாற்றங்களை முன்னெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த தரப்படுத்தல்கள் மூலம் சமத்துவத்துக்கான அரசியல் ரீதியான உரிமை தமிழ்பேசும் மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பாராளுமன்றக் குழுவினர்கள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தனியார் நிலங்களுக்குள் சென்றிருந்தமை தொடர்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருந்தமை ஒரு துயரம் நிறைந்த சம்பவமாகவே கருதப்படவேண்டும்.
இந்தச் சம்பவம் தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மறுமுனையில் சட்டத்திற்கு முரணான தேவையற்ற காரணிகளுக்காக தனியார் நிலங்களில் குறிப்பாக வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் ஊடுருவியிருக்கும் அல்லது ஆக்கிரமித்திருக்கும் விடயம் தொடர்பில் மௌனமாகவே உள்ளனர்.
மோதல்களுக்கான காரணங்கள் தொடர்பில் பரிசீலனை செய்து பிரச்சினைகளுக்கான தீர்வினை தருவதற்கான சுழலினை உருவாக்குவதே அடுத்த பாரிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.
வரவேற்பு
அரசியலமைப்பு திருத்தத்திற்கான முன்மொழிவுகளை அரசாங்கம் கோரியுள்ளமை மிகவும் பாராட்டத்தக்கதொரு விடயம். அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பாக வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானம் தொடர்பில் பலர் கடுமையான விமர்சனங்களை வடமாகாணம் மீது முன்வைத்திருந்தனர்.
இவ்வாறான தீர்மானங்கள் அரசியலமைப்புக்கு முரணானது என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இதற்கெதிராக வழக்கும் தொடுக்கப்பட்டிருந்தது. முதலில் அரசியலமைப்பினை திருத்துவதற்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு திருத்தங்களும் வரையறை ரீதியாக அரசியலமைப்புக்கு முரணானதாகவே உள்ளது. அரசியலமைப்பில் மாற்றங்களை முன்வைப்பதற்காக மக்கள் முயற்சிகளை மேற்கொள்ளும்போது அது அரசியலமைப்புக்கு முரணான விடயமென்ற அர்த்தத்தில் இதனை கூறவில்லை.
தருணம் உருவாகியுள்ளது
மீண்டும் அரசியல் நன்மைகளுக்காக தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை தவிர்த்து சகல தரப்பினரும் தேசிய பிரச்சினைக்கான தீர்வினை காண்பதற்கு ஒன்றிணைய வேண்டிய தருணம் உருவாகியுள்ளது. அரசியலமைப்பு தொடர்பாக வடமாகாண சபையினால் முன்வைக்கப்பட்டிருந்த தீர்மானம் நாட்டினை பிளவுப்படுத்தும் ஒன்றாக சில ஊடகங்கள் கூறியிருந்தன. தமிழ் பேசும் மக்களுக்காக முன்வைக்கப்பட்டிருந்த முன்மொழிவுகள் தமது சிங்கள சகோதரர்களுக்குரிய சம உரிமைக்காகவே முன்மொழியப்பட்டிருந்தது.
பிரிவினைக்கான கடுமையான முன்மொழிவுகளாக அவை இருந்தன. பிராந்தியங்களுக்கான முன்மொழிவுகள் மொழி அடிப்படையில் ஒன்றிணைக்கப்பட வேண்டும். இந்தியா இதனை செய்திருந்ததுடன் தொடர்ச்சியாக அவ்வாறு செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தினை உருவாக்கியிருந்தமை இதற்கான ஒரு வெற்றிகரமான மாதிரியாகும். நாமும் சிங்கள பெரும்பான்மை பகுதிகளில் பிரதிநித்துவத்தையும் கோரவில்லை. அல்லது சிங்கள பெரும்பான்மை பகுதிகளை இரண்டாக பிரிக்குமாறு கோரியிருக்கவில்லை. சிங்கள பெரும்பான்மை பகுதிகளுக்குரிய தீர்மானங்கள் சிங்கள மக்களாலேயே மேற்கொள்ளப்படவேண்டும்.
இராணுவ ஆக்கிரமிப்பு
நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு பொதுமக்களின் காணிகளில் இணுவத்தினர் ஆக்கிரமிப்பு செய்திருப்பது சரியான விடயமாக இருக்காது. வடக்கில் சிவில் சுழலை உடனடியாக உருவாக்கவேண்டியது. நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான அடிப்படையாகும். வடமாகாணத்தில் இராணுவத்தினர் தொடர்ந்தும் இருக்கவேண்டுமென்பதற்கான பாதுகாப்பான கவலைகள் இல்லை.
இராணுவத்தினர் குறைக்கப்பட்டு கடந்த ஏழு வருடங்களில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பலமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் நாம் ஏற்கனவே மீளக்கட்டியெழுப்புதல், மீளெழுச்சி, நல்லிணக்கம் போன்றவற்றுக்கான பாதையில் பயணித்துக்கொண்டிருப்போம்.
தமிழ் சமூகத்தின் மீது நம்பிக்கையின்றி போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் தொடர்ந்தும் இராணுவத்தினரை நிறுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளுமாகவிருந்தால் மற்றொரு பிரபாகரன் மறு அவதாரம் எடுப்பதற்கு எவரையும் குற்றச்சாட்டமுடியாது.
முதலில் அரசியல் பிரச்சினையே
1979ஆம் ஆண்டு மகாவலி திட்டம் கொண்டுவரப்பட்டது. அந்தகாலத்தில் மாகாணசபைகள் காணப்படவில்லை.1987ஆம் ஆண்டு மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இன்றுவரையில் மகாவலித்திட்டத்தின் மூலமாக ஒருதுளி தண்ணீர் கூட வடக்கு மக்களுக்காக கொண்டுவரவில்லை. ஆனால் மகாவலி எல்லை வலயத்தில் காணப்படும் மணலாறு பிரதேசம் வெலிஓயாவாக மாற்றப்பட்டு 4ஆயிரத்து 500 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன.
தமிழ், சிங்கள மக்களின் பிரச்சினைகள் ஒருபுறந்தள்ளிவிட்டு மத்திய அரசாங்கத்தின் நேரடித்தலையீட்டுடன் பொருளதார மேம்பாடு என்ற வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் அவையும் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. ஆகவே தான் முதலில் இனங்களுக்கிடையிலான பிரச்சினைகள், அரசியல் தீர்வு குறித்த பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். அதன் பின்னர் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அமர்ந்து பொருளாதார மேம்பாடு குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி முடிவெடுக்கமுடியும்.
மூன்று மணிநேரத்திற்கு முன்னதாக கூட வடக்கின் பூநகரி பிரதேசத்தில் மின்சாரத்தை வழங்குவதற்கு சமாதானத்தை கட்டியெழுப்புதல் என்ற திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, ஹரீன் பீரிஸ் ஆகியோர் இணைந்து இச்செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார்கள். அதிகாரிகளை அழைத்து அவர்களை மக்களிடத்தில் நேரடியாகச் சென்று இச்செயற்திட்டத்தை முன்னெடுத்துள்ளாகள்.
அபிவிருத்தி திட்டங்களை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாக நாங்கள் இருக்கும்போது ஒருவார்த்தை கூட கூறாது நேரடியாகவே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது எவ்வாறு நியாயமாகும். மக்களுக்கு இவ்வாறான விடயங்களை கூறி அவர்களை விலைக்கு வாங்குவதற்கு முயற்சிக்கின்றார்கள்.
இதேபோன்றுதான் 65ஆயிரம் வீட்டுத்திட்ட செயற்பாடும் காணப்படுகின்றது. 2.1மில்லியன் ரூபா வீடொன்றுக்கு செலவிடப்பட்டு அத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அதிலுள்ள குறைபாடுகளை நாம் சுட்டிக்காட்டும் போது 85ஆயிரம் மக்கள் விண்ணபித்துள்ளார்கள் எனக் காரணம் காட்டப்படுகி்ன்றது. 85ஆயிரம் மக்களுக்கு வீடுகள் அவசியம் என்பது உண்மைதான். ஆனால் இவ்வாறான பொருத்தமற்ற வீடுகள் அல்ல.
இவ்வாறான பிரச்சினைகள் தொடர்கின்றன. மாகாண சபை முழுமையாக புறக்கணிக்கப்பட்டு மத்தியின் ஆதிக்கத்துக்கு உட்பட்டே பொருளாதார செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே தான் முதலில் அரசியல் ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டியது அவசியமாகின்றது.
விசாரணை
ஒருநாட்டின் படைகள் மீதே சர்வதேச விசாரணை கோரப்பட்டுள்ளது. அவர்கள் நாட்டின் ஊழியர்கள். இந்த நாட்டை வழிநடத்துபவர்கள். அதனடிப்படையில் தான் சர்வதேச விசாரணையொன்று வலியுறுத்தப்படுகின்றது. அவ்வாறிருக்கையில் இருதரப்புக்கிடையிலான மோதலின்போது தவறிழைத்ததாக கூறப்படும் ஒருதரப்பு இல்லையென்பதற்காக தவறிழைத்ததாக கூறப்படும் மற்றத்தரப்பை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது என்பது நியாயம்.
விசாரணைகள் நிச்சயமாக முன்னெடுக்கப்படவேண்டும். விசாரணைகளின் ஊடாக தவறிழைக்கப்படவில்லை என்பது நிரூபக்கப்படுமாகவிருந்தால் அதனை ஏற்கமுடியும். அதேபோன்று விசாரணைகளின் பிரகாரம் தவறுகள் கண்டறியப்பட்ட சட்ட வரையறைகளுக்கு உட்பட்ட அடுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ஆனால் திட்டமிட்ட முறையில் விசாரணைகளை தடுக்க முடியாது. விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது அவசியமானது.
பொறுப்புக்கூறலும் நல்லிணக்கமும்
சில தமிழ்க்குழுக்களும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் நல்லிணக்கத்தை அடைவதற்காக போர்க்குற்ற விசாரணைகளை கைவிடுவதற்கு சாதகமான நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றார்கள். பொறுப்புக்கூறலை விடுத்து நல்லிணக்கத்தை அடையமுடியமா என எழுப்பப்பட்ட வினாவுக்கு பதிலளித்த வடக்கு முதல்வர்,
பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகிய இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை. பொறுப்புக்கூறலானது சட்டரீதியாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு அதன்னூடாகவே மேற்கொள்ளப்படவேண்டும். உதாரணமாக பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் இராணுவத்தினர் ஒருவர் தவறிழைத்துவிட்டார். தமிழரே உங்களுக்கு சில விடயங்களை வழங்குகின்றோம்.
தவறு தொடர்பான விடயத்தை கைவிடுங்கள் என கோருவதாக வைத்துக்கொள்வோம். அதனை எவ்வாறு ஏற்றுக்கொள்வது. அது நீதித்துறை சார்ந்தது. தவறு இழைக்கப்பட்டாலோ அல்லது இழைக்கப்படா விட்டாலோ அது விசாரணைகள் ஊடாகவே தெரியவரும். விசாரணைகள் இறுதியில் தான் அடுத்த கட்டம் தொடர்பில் சிந்திக்க முடியும்.
ஆனால் நல்லிணக்கத்திற்காக பொறுப்புக்கூறலை கைவிடமுடியாது. இந்த நாட்டில் அவ்வாறான விடயங்கள் நடைபெறுகின்றன. நீங்கள் இதைசெய்யுங்கள். நாங்கள் உங்களுக்கான விடயத்தை கைவிடுகின்றோம் போன்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. ஒருவர்த்தகச் செயற்பாடு போன்ற நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. மக்களுக்கு நன்மைகிடைப்பதற்காக வர்த்தகப் பேரம்பேசல்களில் ஈடுபடலாம். ஆனால் ஆயிரக்கணக்கானவர்களின் உயிரிழப்புக்கள், இன்று சமூகத்தில் பெண்களை தலைமைத்துவங்களாக கொண்டு பரிதவிக்கும் குடும்பங்களுக்கான பொறுப்புக்கூறலை நல்லிணக்கத்திற்கான பேரம்பேசமுடியாது.
சமஸ்டி
தினேஸ்குணவர்த்தன விக்கினேஸ்வரன் சமஸ்டி தொடர்பாக பேசுகிறார். அதுதொடர்பாக அவருக்கு பேச உரிமையில்லை. நாட்டை பிரிக்கப்பார்க்கின்றார். போன்ற கடுமையான கருத்துக்களை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றார். நான் பிலிப்குணவர்த்தனவை ரோயல் கல்லூரயில் சந்தித்தபோது சமஸ்டி பாதகமானது எனக்கூறினேன். அப்போது ஏன் அப்படிக்கூறுகின்றீர்கள். எஸ்.டபிள்யு.டி.பண்டாரநாயக்க 1926ஆம் ஆண்டு சமஸ்டி இந்த நாட்டிற்கு சிறந்தது எனக் கூறியுள்ளார் என்றார். தினேஸ்குணவர்த்தனவின் தந்தையாரும் இடதுசாரியுமான பிலிப்குணவர்த்தன 1958ஆம் ஆண்டு எனக்கு கூறிய பதிலாகும்.
பலவருடங்களாக சமஸ்டியானது பிரிவினை என்றே காட்டப்பட்டு வந்திருக்கின்றது. சமஸ்டி என்பது என்ன எனச் சற்று பார்ப்போம். பிலிப்குணவர்த்தனவின் தாய்வீட்டை எடுத்துக்கொள்வோம். மிகப்பாரிய பிரதேசத்தில் உள்ளது. தினேஸ்குணவர்த்தன, இந்திக குணவர்த்தன உட்பட அனைவரும் ஆரம்பத்தில் அந்த தாய்வீட்டில் தான் இருந்தார்கள். அவர்கள் திருமணம் செய்த பின்னர் அந்த தாய்வீடு அமைந்திருந்த பாரிய காணியில் தான் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான பகுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர்கள் அந்த இடத்திலேயே இருந்தர்கள். தற்போதும் இருக்கின்றார்கள். அது தான் சமஸ்டி.
இலங்கையில் மாகாணசபைகள் அறிமுகப்படுத்தப்பட்டபோதே சமஸ்டி இங்கு உருவாக்கப்பட்டுவிட்டது. ஆனால் மாகாணசபைக்கு காணப்படும் அதிகாரங்கள் தொடர்பில் தான் பிரச்சினைகள் உள்ளன. மத்திய அரசாங்கம் அதிகமான அதிகாரங்களை வழங்கி மாகாணசபைகளை முடக்கி வைத்திருக்கின்றது. அவ்வப்போது அதிகாரங்களை வழங்கினாலும் வலது கையால் தந்து இடது கையால் எடுக்கும் நிலைமையே உள்ளது. ஆகவே தான் நாங்கள் சமஸ்டி அரசியலமைப்பைக்கோருகின்றோம்.
அவ்வாறான அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்திலேயே தனித்துவமான மக்கள் கூட்டம் தமக்கான தீர்மானங்களை எடுப்பதற்கும் நிருவகிப்பதற்கும் வழியேற்படும். இதனால் நாடு பிளவடையாது. ஒருமித்த இலங்கையின் உள்ளே ஏற்பாடுகள் அமையவேண்டுமெனக் கோருகின்றோம். இதன்மூலமே அனைத்து மக்களும் கூட்டுறவுடன் ஐக்கியமாக வாழும் எதிர்காலச்சூழல் ஏற்படும் என்றார்.

WhatsApp Gold திருடும் ஹேக்கர்கள் உஷார்

WhatsAppஐ ‘WhatsApp Gold’ ஆக மாற்றுங்கள் என்று ஒரு தகவல் பரவி வருகிறது.

இணையத்தில் தகவல்களை திருடும் ஹேக்கர்கள் பல முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அவர்கள்‘WhatsApp Gold’ என்னும் முறை மூலம் WhatsApp பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் முயற்சியில் இறங்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிரபலங்கள் மட்டுமே பயன்படுத்தும் ’WhatsApp Gold’ தற்போது அனைராலும் பயன்படுத்த முடியும் என்ற தகவலோடு ஒரு மெசேஜ் WhatsAppல் வேகமாக பரவி வருகிறது.


உங்களது WhatsAppஐ ‘WhatsApp Gold’ ஆக மேம்படுத்திக் கொள்ள ஒரு இணையத்தளமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இணையதளம் செயல்படவில்லை.

இதனால் இது WhatsApp பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்களின் திருடும் முயற்சியாக கருதப்படுகிறது. எனவே உங்களது நண்பர்களும் உங்களுக்கு இந்த மெசேஜை அனுப்பினால் உஷாராக இருந்து கொள்ளுங்கள்.

கணணிகளிலும் வாட்ஸ் அப்

இன்றைய கால கட்டத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக இருக்கும் குறுஞ்செய்தி சேவை எது என்று பார்த்தால் அது நிச்சியம் வாட்ஸ் அப் தான். புகைப்படங்கள், வீடியோக்கள், குறுஞ்செய்திகள், ஸ்மைலிக்கள் உட்பட ஏனைய கோப்புக்களையும் இச் சேவையினூடாக பகிரப்படக்கூடியதாக இருத்தல் இதற்கு காரணமாகும். எனினும் இச் சேவையினை இதுவரை காலமும் மொபைல் சாதனங்களிலேயே பயன்படுத்தப்பட்டு வந்தன. இந் நிலையில் தற்போது அப்பிளின் Mac, மற்றும் ஏனைய இயங்குதளங்களைக் கொண்ட டெக்ஸ்டாப் கணணிகளில் பயன்படுத்தக்கூடிய வாட்ஸ் அப் மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி விண்டோஸ் 8 மற்றும் OS X 10.9 ஆகியவற்றிற்கு பின்னரான இயங்குதளங்களில் இம் மென்பொருளைப் பயன்படுத்த முடியும். மேலும் இதனை ஸ்மார்ட் கைப்பேசி அப்பிளிக்கேஷனுடன் இலகுவாக ஒருங்கிணைக்க (Synchronized) செய்துகொள்ள முடியும். இதற்காக கணணினியில் வாட்ஸ் அப் மென்பொருளை நிறுவி அதனை ஆரம்பித்த பின்னர் தென்படும் QR குறியீட்டினை கைப்பேசியின் ஊடாக ஸ்கான் செய்தால் போதுமானது.

சர்வதேச விசாரணையின் மூலமே உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும்

சாட்சியங்கள் அற்ற படுகொலைகளாக முள்ளிவாய்க்கால் படுகொலைகள் இடம்பெற்றதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலையில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் எந்தவித சாட்சியங்களும் இன்றி கொல்லப்பட்டார்கள். இவ்வாறு இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கு இலங்கையின் சட்டத்தில் இடமில்லை. இலங்கையில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சரியான தீர்வு கிடைக்காது. இதனாலேயே சர்வதேச குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதாக தெரிவித்த வடமாகாண முதலமைச்சர், சர்வதேச விசாரணையின் மூலமே உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும் என தெரிவித்தார். அத்துடன் உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமற்போனோரின் குடும்பங்கள் தினமும் தன்னை அலுவலகம் வந்து சந்திப்பதாகவும் அவர்களின் தேவைகள் அறிந்து, அவர்களுக்கான நிரந்தரத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் கடந்த கால யுத்தத்தில் யார்? யார்? கொல்லப்பட்டார்கள், எவ்வாறு கொல்லப்பட்டார்கள்? யாரால் கொல்லப்பட்டார்கள்? என்ற சாட்சியங்கள் இல்லை. இது குறித்து விசாரணை செய்யவேண்டும். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது மரபு ரீதியானது. ஒன்று சேர்ந்து சோகத்தை வெளிப்படுத்துவது எங்களின் பாரம்பரிய மரபாகும். இந்த அஞ்சலி நிகழ்வுகளைக் கூட கடந்த அரசாங்கம் தடுத்த போதிலும், புதிய அரசாங்கம் எங்கள் மனநிலையை புரிந்துகொண்டு தடை விதிக்கவில்லை. அதேபோல் தமிழ் மக்களின் பிரச்சினைக்காக தீர்வுகளை புதிய அரசாங்கம் வழங்கும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கருத்து கணிப்பா கருத்து திணிப்பா?

கருத்து கணிப்பா கருத்து திணிப்பா உண்மை என்ன ?
இதன் பிண்ணணி  என்ன?

கருத்து கணிப்பா கருத்து திணிப்பா?

கருத்து கணிப்பா கருத்து திணிப்பா உண்மை என்ன ?
இதன் பிண்ணணி  என்ன?

YouTube Live 360 எனும் புதியவசதி

கூகுளைதாய் நிறுவனமாக கொண்டு செயற்படும் யூடியூப் நிறுவனமானது முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்குகின்றது. இந் நிறுவனம் கடந்த வாரம் YouTube Live 360 எனும் புதியவசதியினை பயனர்களுக்காக அறிமுகம் செய்திருந்தது. இவ் வசதியின் ஊடாக எந்தவொரு நிகழ்ச்சியையும் 360 டிகிரியில் பார்த்து மகிழ முடியும். இப் புதிய வசதியில் பொப்பாடகி டவுனின் நேரடி இசைநிகழ்ச்சி ஒன்று முதன் முறையாகப திவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சுமார்30 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய இந்த வீடியோவினை மவுஸின் உதவியுடன் 360 டிகிரியில் சுழற்றி பார்க்க முடியும். இதற்கு பிரத்தியேகமான கணணி வன்பொருட்களோ, மென்பொருட்களோஅல்லது Virtual Reality ஹெட்செட்களோ தேவையில்லை. அனைத்து வகையான கணணிகளிலும் இவ் வசதியினைப் பெற்றுக்கொள்ளமுடியும்

இலவசமாக வீடியோ எடிட்டிங் செய்ய

இத்தளத்திற்கு சென்று http://www.aimersoft.com/video-editor.htmlஎன்ற பொத்தானை சொடுக்கி இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை  தறவிரக்கலாம். பலவிதமான நுனுக்கமான சேவைகள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவே இருக்கின்றது ஒருமுறை நாம் பயன்படுத்திவிட்டால் அது கொடுக்கும் சேவையால் மேலும் நம்மை  ஈர்க்கிறது. வீடியோ எடிட்டிங் செய்ய தெரியாது என்று சொல்லும் நண்பர்களுக்குக் கூட எப்படி வீடியோ எடிட் செய்யலாம் என்று அழகாக சொல்லியும் கொடுக்கிறது.
Aimersoft video editor crack Licensed e-mail: w2mlh@popgx.com
 Registration code: DA510E9A01FF1D1601591576B58D100B

101 ஆண்டுகளாக நீதிக்காகப் போராடும் ஆர்மேனியா.

ஆர்மேனிய இனஅழிப்பின் 101ஆவது ஆண்டு நினைவுதினம் கடந்த ஏப்ரல் 24ம் திகதி ஆர்மேனியா தொடக்கம் உலகின் பல்வேறு பாகங்களிலும் உணர்வுபூர்வமாகவும் எழுச்சிபூர்வமாகவும் நினைவுகூரப்பட்டது. ஆர்மேனியாவுக்கு வெளியே இடம்பெற்ற நினைவுகூரல் நிகழ்வுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஆர்மேனியர்களுடன் ஆர்மேனியர்கள் அல்லாதவர்களும் தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் முகமாக கலந்துகொண்டனர். முதலாவது உலகப் போர் ஆரம்பிக்கும் போது இரண்டு மில்லியனாக இருந்த ஆர்மேனிய கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை சுமார் எட்டுவருடங்களில் அரை மில்லியனாகியது. அதாவது, ஒட்டொமன் பேரரசால் (இன்றைய துருக்கி) ஒன்றரை மில்லியன் ஆர்மேனிய கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஒட்டொமன் பேரரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 250 ஆர்மேனிய அறிவியலாளர்கள் 24 ஏப்ரல் 1915ல் கொன்ஸ்ரான்ரிநோபிளில் (Constantinople) வைத்து படுகொலை செய்யப்பட்டமை ஆர்மேனிய இனஅழிப்பின் ஆரம்பமாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே ஏப்ரல் 24ம் திகதியை ஆர்மேனியர்கள் ஆர்மேனிய இனஅழிப்பு நாளாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.
இஸ்லாம் மதத்தை முன்னிலைப்படுத்தி பரவலடைந்த ஒட்டொமன் பேரரசு, தனது எதிரி நாடான ரஸ்யாவுக்கும் ஆர்மேனியர்களுக்கும் இடையில் நிலவிய உறவு தமது பலத்தை உறுதிப்படுத்தும் விரிவாக்கத்துக்கு இடையூறாக அமையும் என கருதியதாலேயே, ஆர்மேனிய இனஅழிப்பை மூர்க்கத்தனமாக மேற்கொண்டதாக கணிசமான வரலாற்றியலாளர்கள் கூறிவருகின்றனர். ஆர்மேனியர்கள் மீதான இனஅழிப்பை ஒட்டொமன் பேரரசு பல்வேறு கட்டங்களாக முன்னெடுத்திருந்தது. படுகொலைகள், பட்டினியால் சாகடித்தல், கட்டாய இடம்பெயர்வு தொடக்கம் ஆர்மேனிய சிறுவர்களை பலவந்தமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றியது வரை வெவ்வேறு வடிவங்களில் இனஅழிப்பை முன்னெடுத்திருந்தது. ஆர்மேனியர்களின் பண்பாடு, மொழி, மதம், அடையாளம் போன்றவற்றை நிர்மூலமாக்குலே இதன் நோக்கமாகும். ஏனெனில், ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின் தனித்து குறித்த இனத்தை பகுதியாகவோ முழுமையாகவோ அழிப்பதனூடாக அதனை முழுமையாக அழிக்க முடியாது. மாறாக, குறித்த இனத்தின் மொழி, பண்பாடு, சமூககட்டமைப்பு, பொருளாதாரம், அடையாளம் மற்றும் குறித்த இனக்குழுமத்தினதோ மதக்குழுமத்தினதோ சித்தாந்தம் போன்றவற்றை உடனடியாகவோ படிப்படியாகவோ அழிப்பதனூடாக இனஅழிப்பு முழுமைபெறும். இதன் காரணமாகவே இனஅழிப்பு என்பதை நிரூபிப்பதில், செயற்பாட்டின் நோக்கம் (Intention) முக்கியமானதாகும். ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கம் இன்றி பல ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டால் அதனை இனஅழிப்பென்று நிரூபிக்க முடியாது. ஆனால், ஒரு இனத்தினதோ அல்லது மதக்குழுமத்தினதோ அடையாளத்தை அழிக்கும் நோக்கோடு, குறித்த இனத்தினரை கட்டாயப்படுத்தி மதம்மாற்றினால் அதனை இனஅழிப்பென வாதிடமுடியும் என்பதன் எடுத்துகாட்டாக ஆர்மேனியர்களுக்கு எதிரான இனஅழிப்பு திகழ்கிறது.
ஆர்மேனியர்களின் 101 வருடகால நீதிக்கான போராட்டத்தில் ஆர்மேனிய இனஅழிப்பை சர்வதேச சமூகம் ஏற்று அங்கீகரிக்க வேண்டும் என்பது முதன்மையாகவுள்ளது. ஆர்மேனிய இனஅழிப்பை அமெரிக்கா வெள்ளை மாளிகை பிரதிநிதிகளும், செனட்டும் தனித்தனியாக ஏற்று அங்கீகரித்துள்ளன. அத்துடன், அமெரிக்காவின் 44 மாநிலங்கள் ஆர்மேனிய இனஅழிப்பை ஏற்று அங்கீகரித்துள்ளன. இருப்பினும், அமெரிக்கா ஒரு நாடாக ஆர்மேனிய இனஅழிப்பை உத்தியோகபூர்வமாக ஏற்று அங்கீகரிக்கவில்லை. 2008ம் ஆண்டு சனாதிபதி தேர்தல் பிரசாரங்களின் போது ஆர்மேனிய இனஅழிப்பை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக ஏற்று அங்கீகரிப்பதற்காக பணியாற்றுவேன் என உறுதிமொழி வழங்கிய பரக் ஓபாமா அவர்கள், குறித்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என்ற குற்றாச்சாட்டு ஆர்மேனியர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இனஅழிப்பு (Genocide) என்ற சொற்பிரயோகத்தை தவிர்த்துவரும் பரக் ஓபாமா அவர்கள், அதற்குப் பிரதியீடாக Meds Yeghern என்ற ஆர்மேனிய சொற்பிரயோகத்தை பாவித்தமையையும் விமர்சித்துள்ளனர். Genocide என்ற சொற்பிரயோகம் 1944 லேயே உருவாக்கம் பெற்றது. ஆனால், ஆர்மேனிய இனஅழிப்பு ஆரம்பித்தது 1915ல். அக்காலப் பகுதியில் பாரிய குற்றம் (Meds Yeghern) என்றே இனஅழிப்பை ஆர்மேனியர்கள் வர்ணித்தார்கள். ஆயினும், 1965லிருந்து ஆர்மேனியர்கள் மீதான படுகொலை இனஅழிப்பு என ஏற்று அங்கீகரிக்கப்படத் தொடங்கியது. அதற்கு ஆர்மேனிய புலம்பெயர் சமூகம் மேற்கொண்ட பரப்புரைகளும் இராசதந்திர நடவடிக்கைகளும் வித்திட்டது. அதன் ஒரு அங்கமாக, பரக் ஓபாமா அவர்களும் 19 சனவரி 2008 ஆர்மேனியர்களின் இனஅழிப்பை அங்கீகரிப்பேன் என உறுதிமொழி வழங்கினாலும் அதனை காப்பாற்றவில்லை. இது, இனஅழிப்பு என்ற சொற்பிரயோகம் மட்டுமல்ல, சர்வதேச உறவில் குறித்த சொற்பிரயோகங்களை நாடுகளும் முக்கிய தலைவர்களும் தவிர்த்து வருவதற்கான பின்புலத்தையும் புடம்போட்டு காட்டுகிறது.
இதேவேளை, ஆர்மேனிய இனஅழிப்பை இதுவரை 20 நாடுகள் உத்தியோகபூர்வமாக ஏற்று அங்கீகரித்துள்ளன. அத்துடன், ஐரோப்பிய நாடாளுமன்றம், தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டது இனஅழிப்பு என தீர்ப்பு வழங்கிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent Peoples’ Tribunal) உட்பட உலகின் மிக முக்கியமான அமைப்புகள், சபைகள், பேரவைகளும் ஆர்மேனிய இனஅழிப்பை ஏற்று அங்கீகரித்துள்ளன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாலோ அல்லது ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் நிறைவேற்றியதலோ ஆர்மேனிய இனஅழிப்பை மேற்குறித்த நாடுகளோ சபைகளோ ஏற்று அங்கீகரிக்வில்லை. மாறாக, ஆர்மேனிய மக்களின், குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் ஆர்மேனிய மக்களின் இடைவிடாத, சோர்ந்து போகாத, பரம்பரை பரம்பரையான, விலைபோகதா போராட்டமே இன்றும் ஆர்மேனிய இனஅழிப்பை சர்வதேச அரங்கில் பேசுபொருளாக வைத்திருப்பதோடு, கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரசியா உட்பட 20 நாடுகளையும் உலகின் முக்கியமான அமைப்புகளையும் எற்று அங்கீகரிக்க வைத்திருக்கிறது. நடாத்தப்பட்ட இனஅழிப்பை ஏற்று அங்கீகரித்தல் அல்லது நீதிக்கான தீர்ப்பு வழங்குதல் என்பது சர்வதேச சமூகத்தாலோ அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தாலோ விரைவாக ஏற்று அங்கீகரிக்கப்பட்டு நீதி வழங்கப்படுவது உடனடி சாத்தியமான விடயமல்ல. மாறாக இது பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து தோற்றம் பெற்று, அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள், அரசியற் கட்சிகள், ஊடகங்கள், அறிவியலாளர்கள், கல்விமான்கள் போன்ற தரப்புகள் ஊடாக விரிவடைந்து பரிணமிக்கின்ற ஒரு விடயம். பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நடந்த அநீதியை, இனஅழிப்பை முன்னிறுத்தியதால் சர்வதேச அங்கீகாரம் ஏற்பட்டிருக்கிறதே தவிர, சர்வதேச சமூகம் ஏற்று அங்கீகரித்த பிற்பாடே தமக்கு இனஅழிப்பு இடம்பெற்றிருக்கிறது என மக்கள் கூறியதாக வரலாறில்லை. இதனைத்தான் உலகில் முதன்முதலாக இனஅழிப்பை சந்தித்த ஆர்மேனியர்களின் வரலாறு, இனஅழிப்புக்கு முகம்கொடுத்த, முகம்கொடுத்து வருகிற தரப்புகளுக்கும் நீதிக்காக போராடும் தரப்புகளுக்ளும் எடுத்துச் சொல்கிறது.
ஒட்டொமன் இராச்சியத்தின் தலைநகரமாக இருந்த கொன்ஸ்ரான்ரிநோபிள் துருக்கியின் இன்றைய முக்கிய நகரங்களில் ஒன்றான ஸ்ரான்வுள் (Istanbul) ஆக திகழ்கிறது. துருக்கி இன்றும் ஒரு பலமான நாடு. அமெரிக்காவோடு முக்கிய உறவைக் கொண்டுள்ள துருக்கி, நேற்ரோவில் (NATO) பலம்மிக்க ஒரு நாடாக திகழ்கின்றது. இத்தகைய துருக்கிக்கு எதிராக 101 வருடங்கள் தாண்டியும் சந்ததி சந்ததியாக ஆர்மேனியர்களின் நீதிக்கான போராட்டம் தொடர்கிறது. கடந்த 24ம் திகதி அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள துருக்கி தூதுவராலயத்திற்கு முன் இடம்பெற்ற நினைவுகூரல் மற்றும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் கலந்துகொண்டார்கள். 101 ஆண்டுகள் ஆகியுள்ள போதிலும் ஆர்மேனிய இனஅழிப்பை மறுத்து வரும் துருக்கி, படுகொலை செய்யப்பட்ட ஆர்மேனியர்களின் எண்ணிக்கையை வலுவாக குறைத்து காட்டுவதுடன், குறித்த மரணங்களுக்கு வேறு கற்பிதங்களைக் கூறிவருகிறது. ஆர்மேனியாவுக்கு அடுத்தபடியாக ஆர்மேனியர்கள் அதிகமாக வாழும் நாடு அமெரிக்கா. ஆதலாலேயே, இனஅழிப்புக்கு நீதி கேட்டும் ஆர்மேனியர்களின் போராட்டம் அமெரிக்காவில் அதிக கவனத்தை ஈர்ந்திருக்கிறது. இருப்பினும், இதனை முறியடிக்கும் நகர்வுகளில் துருக்கி தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. ஆர்மேனியர்களின் 101 ஆவது ஆண்டு நினைவுகூரலை அமெரிக்காவில் நீர்த்துப் போகச் செய்யும் முகமாக, துருக்கி அமெரிக்காவின் முக்கியமான நகரங்களிலும், முக்கியமான அமெரிக்க நாளேடுகளிலும் பெரும் பணச்செலவில் விளம்பரங்களை மேற்கொண்டது. ஆயினும், ஆர்மேனியர்கள் மனம்தளரவில்லை. அவர்களின் எதிர்ப்பையடுத்து கணிசமான நகரங்களில் குறித்த விளம்பர பலகைகள் அகற்றப்பட்டது. தாம் உலகின் பலம்மிக்க நாடொன்றுடன் போராடுகிறோம். இது சவால் நிறைந்த முனைப்புகள் என தெரிந்திருந்தும் ஆர்மேனியர்களின் போராடும் உணர்வு குறைந்து போகவில்லை. துருக்கியோடு ஒப்பிடும் போது ஆர்மேனியர்கள் மிகப் பலவீனமான நிலையிலிருந்தாலும், ஆர்மேனியர்களின் பலம் என்பது அவர்களின் மனஉறுதியிலிருந்தும் போராட்டத்தின் தொடர்ச்சியிலிருந்தும் தோற்றம் பெற்று 101 வருடங்களுக்குப் பிறகும் உயிர்ப்போடு திகழ்கிறது. ஆர்மேனியர்களுக்கென்று ஒரு நாடும், அதனை ஆள்வதற்கு அரசும் உண்டு. ஆயினும், அந்த நாட்டின் அமைவிடமும், நாட்டில் பலவீனமான முறைமைகளும் ஆர்மேனிய அரசால் இனஅழிப்புக்கு நீதி கேட்கும் போராட்டத்தில் பெரும் திருப்புமுனைகளை ஏற்படுத்த முடியவில்லை. இருப்பினும், நீதி கோரி போராடும் ஆர்மேனிய புலம்பெயர்ந்து வாழும் சமூகத்துக்கு ஆதரவாக ஆர்மேனிய அரசு இருந்து வருகிறது.
நமக்கான போராட்டத்தை நாமே ஆரம்பிக்க வேண்டும்; தொடரவேண்டும். நேர்த்தியான கொள்கைவகுப்புடனும், சிறந்த திட்டமிடல் முகாமைத்துவத்துடனும் முன்னெடுக்கப்படும் மக்கள் மயப்பட்ட போராட்டம், எமக்கான நேச சக்திகளையும், எமக்கு சாதகமான அக, புறச்சூழல்களையும் உருவாக்கும். மாறாக, எமக்காக யாரும் போராடுவார்கள், யாராவது எமக்கு நீதியை தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்க முடியாது. நாம் போராடாமல் விடுகின்ற ஒவ்வொரு தருணத்திலும், நாம் சோர்வடைகின்ற ஒவ்வொரு கணப்பொழுதுகளிலும், யாரையும் நம்பி நாம் காத்திருக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், எமக்கான பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்வோர் சோரம்போகிற, சரணகதியடைகிற ஒவ்வொரு சூழலிலும் எமது போராட்டம் நீர்த்துப் போகும். அந்தப் பலவீனமான நிலையென்பது எமது போராட்டத்தின் அடித்தளத்தை மெதுமெதுவாக ஆட்டம் காணச் செய்து, இறுதியில் எமது நீதிக்கான போராட்டத்தை முற்றுமுழுதாக அழித்துவிடும். ஆகவே, எமக்காக நாமே போராட வேண்டும். எமக்கு நடந்த அநீதியை, இனஅழிப்பை ஓங்கி ஒலித்து, உறுதிபட நாமே சொல்ல வேண்டும். உறுதிகுன்றாத மனோதிடமும் போராட்டத்தின் இடைவிடாத தொடர்ச்சியும் நீதிக்கான எமது போராட்டங்களின் அடிநாதங்களில் முக்கியமான அம்சங்களில் ஒன்று என்ற மனப்பாங்கோடு ஆர்மேனியர்களின் போராட்டம் 102 ஆவது ஆண்டில் தடம் பதித்துள்ளது.
தமிழின அழிப்பின் ஒரு அங்கமாக, சிங்கள தேசத்தால் மிக நுட்பமாக முன்னெடுக்கப்படும் தமிழர்களின் அடையாள அழிப்புக்கும் சித்தாந்த சிதைப்புக்கும் மத்தியில், தமிழர்களின் இனஅழிப்பு மறுக்கப்பட்டு வருகின்ற சூழலில், தமிழ் இனஅழிப்பு என்ற சொற்பிரயோகத்தை வெளிச்சக்கதிகள் மட்டுமன்றி புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சிலவும், தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் தவிர்த்துவருகின்ற பின்னணியில், உத்தியோகபூர்வ கூட்டுநினைவுகூரல் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்ற பின்புலத்தில், முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா ஆட்சிபீடம் நடாத்திய
இனஅழிப்பின் ஏழாவது ஆண்டை நினைவுகூர தயாராகும் தமிழர் தேசம் ஆர்மேனியர்கள் தரும் படிப்பினைகளை கவனத்திற்கொண்டு தனது நீதிக்கான போராட்டத்தை பலப்படுத்துமா?
தாமதம் ஏனோ ? எங்கள் இயேசுவே

தாமதித்தோம் இந்த நாள்வரையும்

தாழ்விடங்களில் நோக்கி பார்த்து தற்பரனே இரங்கிடுவீர்

சீக்கிரம் என்று சொன்னவரே சியோனில் இருந்து இறங்கிடுவீர்

சீரான வாழ்வை எனக்களிக்க சிக்கிரம் வாரும் என் இயேசுவே

நீர் சிந்தின உதிரம் எல்லாம் சிலுவையின் கிழ் உதிர்ந்தனவே

நாங்கள் சிந்தின எங்கள் இரத்தமோ கொதித்து தணிந்து தீர்ந்தது

மனித உரிமை மீறல்களுக்குத் துணைபோகிறது இலங்கையின் நீதித்துறை

துன்புறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகளை அனுமதிப்பதன் ஊடாக இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பு மனித உரிமை மீறல்களுக்கு அனுமதியளிப்பதாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகளின் சிறப்புப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை சென்று நிலமைகளை நேரில் ஆராய்ந்திருந்த சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா வின் சிறப்புப் பிரதிநிதி ஹுவான் ஈ மெண்டிஸ் மற்றும் சுயாதீன நீதிமன்ற கட்டமைப்பிற்கான ஐ.நா பிரதிநிதி மொனிக்கா பின்டோ ஆகியோர் தமது விஜயம் தொடர்பில் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.குற்றச்செயல்கள் தொடர்பில் சிறிலங்காவின் நீதிமன்ற கட்டமைப்பு செயற்பட்டுவரும் விதம் மறைமுகமாக சித்திரவதைகளை நீதிமன்றங்கள் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளன என்றும் ஐ.நா பிரதிநிதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தண்டனை வழங்குவதற்கு ஒப்புதல் வாக்குமூலத்தை மாத்திரம் சாட்சியாக எடுத்துக்கொள்ள முடியாது என தெரிவிக்கும் ஐ.நா அதிகாரிகள் சிறிலங்காவில் 90 வீதமான தண்டனை வழங்கும் வழக்குகள் ஒப்புதல் வாக்குமூலத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக பயங்கரவாத மற்றும் குற்றப்புலனாய்வு பொலிசார் மாத்திரமன்றி சாதாரண பொலிசாரும் சித்திரவதைகளையும் துன்புறுத்தல்களையும் ஆயுதமாக பயன்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். அது மாத்திரமன்றி சிறிலங்காவின் நீதிமன்றக் கட்டமைப்பில் தமிழ் மொழி அறிந்த மற்றும் சிறுபான்மையின நீதிபதிகளின் பற்றாக்குறையும் நீதி நிலைநாட்டப்படாமைக்கு பிரதாக காரணமாக அமைந்துள்ளது என்றும் ஐ.நா அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயான் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலையே

இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலையே என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயான் தெரிவித்தார். நேற்றுமுன்தினம் பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டத் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரித்தானிய தொழிற் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரயான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டிடத்தொகுதியில் முள்ளிவாய்க்கால் கொடூரங்களை நினைவுகூரும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இறுதிப்போரிலிருந்து உயிர்தப்பி பிரிட்டனுக்கு வந்து அரசியல் தஞ்சம்கோரியுள்ள களமுனை வைத்தியர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு, தமது கோர அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தபோது கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசனின் புதல்வர் பார்த்தீபனும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்வில் ஆளும் பழமைவாதக் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி மற்றும் லிபரல் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். என்பீல்ட் வடக்கிற்கான பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயான் உரையாற்றுகையில் “நாம் இவ்வாறான சாட்சியங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும்போது தான் போர்க்குற்றம் என்றால் என்ன என்பதனையும், அதற்கு எவ்வாறான விலைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதனையும் ஆர்த்மார்த்தமாக அறியக்கூடியதாக இருக்கிறது. இந்த விடயங்கள் குறித்து விசாரணைசெய்ய காத்திரமான சர்வதேச உள்ளீடு அடங்கலான ஒரு விசாரணைபொறிமுறை அமையவில்லையாயின், இலங்கையில் நிலையான சமாதானம் ஒருபோதும் ஏற்படாது. இலங்கைத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலையே. இவ்வாறான கோரச் சம்பவங்கள் இடம்பெற்றிக்கும்போது இதனை வேறு எவ்வாறு அழைப்பது. பொறுப்புக்கூறும் நடைமுறையில் சர்வதேச உள்ளீடு நிட்சயம் உள்வாங்கப்படவேண்டும். இதனைத் தான் ஐ.நா கூறியிருக்கிறது. இதனைத் தான் சிறிலங்கா அரசும் ஏற்றுக்கொண்டிருந்தது”. என தொிவித்தார்.

நீராகாரம்

தமிழனின் உணவே மகத்துவம்.பழந்தமிழர் காலம் தொட்டே நமது உணவு பழக்கத்தில் முக்கியமான ஒன்றாக விளங்கும் நீர் ஆகாரம் அல்லது நீச்ச தண்ணி அல்லது புளி தண்ணி. இதை நாம் உணர்ந்தததை விட அயலான் உணர்ந்து அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து சந்தை படுதியுள்ளர்கள் என்று விளக்கும் அருமையான காணொளி.

உக்ரைனில் ஊழல் செய்த அரசியல்வாதியை அந்நாட்டு மக்கள் குப்பை தொட்டியில் எறியும் காட்சி நம் நாட்டில்?

உக்ரைனில் ஊழல் செய்த அரசியல்வாதியை அந்நாட்டு மக்கள் குப்பை தொட்டியில் எறியும் காட்சி நம் நாட்டில்?துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு! இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை! இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி! 2016 - உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு!

நீராகாரம்

தமிழனின் உணவே மகத்துவம்.பழந்தமிழர் காலம் தொட்டே நமது உணவு பழக்கத்தில் முக்கியமான ஒன்றாக விளங்கும் நீர் ஆகாரம் அல்லது நீச்ச தண்ணி அல்லது புளி தண்ணி. இதை நாம் உணர்ந்தததை விட அயலான் உணர்ந்து அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து சந்தை படுதியுள்ளர்கள் என்று விளக்கும் அருமையான காணொளி.

கஜேந்திரகுமார் டென்மார்க் பாராளுமன்றவளாகத்தில் ஆற்றிய உரை

டென்மார்க் பாராளுமன்றவளாகத்தில் கஜேந்திரகுமார் ஆற்றிய உரைடென்மார்க் பாராளுமன்ற வளாகத்தில் டேனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் நடத்திய சர்வதேச சட்டங்களும்இ மனித உரிமை மீறல்களும் என்னும் வரலாற்றுப்புகழ் மிக்க மாநாடு 11.05.2016 சனிக்கிழமை முற்பகல் 09.15ற்கு ஆரம்பித்து 12.00 மணிவரை சிறப்பாக நடந்தேறியது.
 சிறீலங்காவில் நடைபெற்ற, நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள், திட்டமிட்ட குடியேற்றங்கள், நில அபகரிப்புக்கள் போர்க்குற்றங்கள் போன்றன தொடர்பாக சர்வதேச சட்டங்களும் சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல் என்ற தலைப்பில் விவகாரம் பேசப்பட்டது.
 போர் முடிந்ததாகக் கூறப்பட்டாலும் கடந்த ஏழாண்டு காலமாக மாற்றமின்றி தொடரும் அவலங்களுக்கு சர்வதேச சமுதாயம் எடுக்கும் தார்மீகப் பொறுப்புத்தான் என்ன.. இதுகுறித்த சர்வதேச அறிஞர், அரசியல் தலைவர்கள் கருத்துப்பகிர்ந்து கவனயீர்ப்பை ஏற்படுத்தும் மாநாடாக இம் மாநாடு அமைந்தது.
இந்த மாநாட்டில் டேனிஸ் பாராளுமன்றத்தின் முக்கிய உறுப்பினர்களான மிச்சேல் அஸ்ரப் ஜென்சன், நிக்கொலாய் விலும்சன், மோண்ஸ் ஜென்சன், கிறிஸ்டியான் யூல் ஆகிய தலைவர்களும், தாயகத்தில் இருந்து முன்னாள் பராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் சிவில் சமூக அமையத்தின் சார்பாக கத்தோலிக்கப் பாதிரியார் எழில் ராஜன், உலகப்புகழ் பெற்ற மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பிரான்சிஸ் ஹர்ரிசன், குர்டிஸ்தான் போராட்ட அமைப்புப் பிரதிநிதி, டேனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் பொன் மகேஸ்வரன் ஆகியோர் முக்கிய உரைகளை வழங்கினார்கள்.

நீராகாரம்


தமிழனின் உணவே மகத்துவம்.பழந்தமிழர் காலம் தொட்டே நமது உணவு பழக்கத்தில் முக்கியமான ஒன்றாக விளங்கும் நீர் ஆகாரம் அல்லது நீச்ச தண்ணி அல்லது புளி தண்ணி. இதை நாம் உணர்ந்தததை விட அயலான் உணர்ந்து அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து சந்தை படுதியுள்ளர்கள் என்று விளக்கும் அருமையான காணொளி.

கத்தரிக்காய்யின் மருத்துவ குணங்கள்

இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடைகளில் ஒன்று காய்கறிகள். தினமும் நாம் சமைப்பதற்கு காய்கறிகளை பயன்படுத்துகிறோம். அந்த  காய்கறிகளில் என்ன சத்துகள் இருக்கின்றது என்பதை நாம் தெரிந்து சாப்பிடுகிறோமா என்றால் இல்லை, எத்தனை பேருக்கு தெரியும் நாம் சாப்பிடும்  காய்கறியில்

என்ன சத்துகள் இருக்கிறது என்று…. கேரட், கறிவேப்பிலை கண்களுக்கு உகந்தது என பொதுவாக நாம் அறிந்திருப்போம். நாம் சாப்பிடும்  காய்கறிகளின் பயன்கள் மற்றும் சத்துகளை அறிந்து சாப்பிட்டலாமே. காய்கறிகளில் நாம் முதலில் பார்க்கவிருப்பது கத்தரிக்காய்.

கத்தரிக்காய்

என்ன சத்துகள் இருக்கு: தினமும் கத்தரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துகள். பொதுவாக கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து  இருக்கிறதை தெரிந்துகொள்ள வேண்டும்.. மேலும் ஃபைபர் 11%, மாங்கனீசு 10%, பொட்டாசியம் 5.3%,  ஃபோலேட் 4.5%, வைட்டமின் கே 3.5%,  செம்பு 3.5%, வைட்டமின் பி 63.5%, டிரிப்தோபன் 3.1%, வைட்டமின் சி 3%, மெக்னீசியம் 2.8%,  வைட்டமின் பி 32.6%, கலோரி 1%.

யாருக்கு நல்லது : ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சாப்பிடலாம். மேலும் உடல் சூட்டை தக்க வைத்துக்கொள்ள  விரும்புபவர்களும் இவ்வாறு சாப்பிடலாம்.

யாருக்கு நல்லதல்ல: சரும நோயாளிகள், புண், அலர்ஜி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. மேலும் இவற்றை சாப்பிட்டால் அலர்ஜி அதிகப்படும், மேலும்  அரிப்பை தூண்டும்.. அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் முதல் மூன்று மாதங்களுக்கு சாப்பிடக்கூடாது.

பலன்கள்: கத்தரிக்காய் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும். மேலும் நீரிழிவை கட்டுப்படுத்த கத்தரிக்காயை பயன்படுத்துகின்றனர்.  நரம்புகளுக்கு வலுவூட்டும். சளி, இருமலை குறைக்கும். கொழுப்பின் அளவை கட்டுபடுத்தி இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும், ரத்த அழுத்தத்தை  குறைக்கும். நீல நிற கத்தரிக்காய் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மாதுளம்பழத்தின் மருத்துவ குணங்கள்

மாதுளம்பழத்தின் பூ பிஞ்சு, காய், இலை, பட்டை, பழம், தோல் முதலிவையும் மருத்துவ தன்மை வாய்ந்தது.

 நாம் உண்டு வரும் பழங்கள் எல்லாம் மருத்துவ தன்மை வாய்ந்தது. அதில் மாதுளை ஒரு அற்புத மருத்துவ தன்மை கொண்டது. அதன் பூ பிஞ்சு, காய், இலை, பட்டை, பழம், தோல் முதலிவையும் மருத்துவ தன்மை வாய்ந்தது ஆகும். மாதுளையின் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர், பட்டை ஆகிய அனைத்துப் பாகங்களும் மருத்துவதில் பயன்படுபவை.

மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள் :பூ, பழத்தோல், பட்டை ஆகியவை துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. பழம், இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. பூ, பழத்தோல் ஆகியவை ரத்தப் போக்கைக் கட்டப்படுத்தும். துவர்ப்புச் சுவையைக் கூட்டும். பழம் குளிர்ச்சியை உண்டாக்கும். பூ, பசியைத் தூண்டும். மரப்பட்டை, வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். விதை, ஆண்மையைப் பெருக்கும். குடல் புழுக்களைக் கொல்லும். பல நோய்களையும் கட்டுப்படுத்தி உடலை வளமாக்க மாதுளை பயன்படுகின்றது.மயக்கம், தலைச்சுற்றல், தொண்டை வறட்சி, புளிப்புயேப்பம், வாந்தி தீர  :
மாதுளம் பழச் சாறு, 100 மி.லி. அளவு காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும். பிரயாணத்தின் போது சிலருக்கு வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படலாம். அப்போதும் இதனை சாப்பிட்டு பயன் பெறலாம்.
ரத்த மூலம் கட்டுப்பட :

பூச்சாறு 15 மி.லி. சிறிதளவு கற்கண்டு சேர்த்து, காலையில் மட்டும் குடித்து வர வேண்டும். 2 வாரங்கள் தொடர்ந்து செய்து வரலாம்.

உடல் குளிர்ச்சி பெற  :

ஒரு டம்ளர் அளவு பழச்சாற்றை, தேவையான அளவு கற்கண்டு சேர்த்து, காலையில் குடிக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி நிற்க :

மாதுளம் பழச்சாறு குடிப்பது உடனே பயன் விளைவிக்கும். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு ரத்த சோகையும் ஏற்படக்கூடும். இதற்கும் மாதுளம் பழச்சாறு உகந்தது. நோய்வாய்ப்பட்ட பின்னர் ஏற்படும் உடல் சோர்வைப் போக்க மாதுளம் பழச்சாற்றுடன் சிறிதளவு கல்கண்டு சேர்த்துச் சாப்பிட குணம் பெற முடியும்.

வயிற்றுப் போக்கு, பேதி தீர  :

மாதுளம் பிஞ்சை நன்றாக அரைத்து, பசைபோலச் செய்து கொண்டு, நெல்லிக்காய் அளவு, ஒரு டம்ளர் மோருடன் கலந்து குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 வேளைகள் இவ்வாறு செய்யலாம்.

வாய்ப்புண், தொண்டை ரணம், வலி தீர  :


மாதுளம் பூக்களைச் சேகரித்து, உலர்த்தி, தூள் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை 1/2 தேக்கரண்டி யளவுல், 1/4 லிட்டர் தண்ணீரில் இட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி, வாய் கொப்புளித்து வர வேண்டும்.

மாதுளம் பற்கள்  :

பல்லுக்கு உதாரணமாக மாதுளை விதைகளைக் கூறுவார்கள். நன்கு, முற்றிய மாதுளம் பழத்தை உடைத்தால் உள்ளே முத்துப் பற்கள் போன்று அழகாக அடுக்கப்பட்டிருக்கும் விதைகள் அனைவரையும் அதிசயிக்க வைக்கும். பற்களையும், ஈறுகளையும், பாதுகாக்க மாதுளம் பழம் சாப்பிடவது மிகவும் அவசியமானதாகு