தலைநிமிர வைத்த தமிழக இளைஞர்கள்: வட இந்திய பெண்ணின் பாராட்டு

தலைநிமிர வைத்த தமிழக இளைஞர்கள்: வட இந்திய பெண்ணின் பாராட்டு
தமிழகத்தில் நடைபெற்றும் வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர்களின் எழுச்சி மிகு போராட்டம் உலக மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த போராட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், நடிகர் சங்கம், பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சிகள் ஈடுபட்டாலும், இளைஞர்களின் கண்ணியமான நடவடிக்கையே பாராட்டை பெற்றுள்ளது.
சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுடன் சேர்ந்து களம் இறங்கினர். இருட்டி மெரினாவில் டார்ச் லைட் வெளிச்சத்தில் போராட்டத்தை நடத்தி வந்த இளைஞர்கள், பெண்களுக்கும் உரிய பாதுகாப்பை கொடுத்தது அனைவரையும் மெய்சிலிக்க வைத்தது.
பெங்களூரில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, இருட்டினை பயன்படுத்திக்கொண்ட இளைஞர்கள் பெண்களின் மீது பாய்ந்து தாக்குதலை நடத்தியுள்ளனர். பெங்களூர் மட்டுமல்ல இந்தியாவின் தலைநகரான டெல்லியிலும் இதுபோன்ற பாலியல் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
ஆனால், சென்னையில் நடைபெற்று வந்த இந்த தொடர் போராட்டத்தில், பெண்கள் கண்ணியமாக நடத்தப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டை விட ஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் அமைதியான போராட்டம் ஒட்டு மொத்த இந்தியாவுக்கு வியப்பை அளித்துள்ளது. நான்கு இளைஞர்கள் சேர்ந்தாலே, வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களைப் பார்த்துவிட்ட இந்தியாவுக்கு, தமிழ் இளைஞர்களின் அறவழிப் போராட்டம் பிரமிக்க வைத்துள்ளது.
இதனை வட இந்திய பெண் ஒருவர் பாராட்டியுள்ளார், பெண்களை மதிப்பதில் சென்னை ஆண்களிடம் இருந்து டெல்லிவாசிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென என்.டி.டி.வி எடிட்டோரியல் இயக்குநர் சோனியா சிங் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டொனால்ட் ட்ரம்புக்கு பிரான்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேத்துக்கு மாற்றுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என பிரான்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் யூதர்களுக்கு புனித நகராக ஜெருசலேம் உள்ளது.
பாலஸ்தீனம் வசம் இருந்த ஜெருசலேம் கடந்த 1967ம் ஆண்டு முதல் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலின் தலைநகராக உள்ள டெல் அவிவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேத்துக்கு மாற்றுவேன் என கூறியிருந்தார்.
இன்றளவும் தனது நிலைப்பாட்டில் இருந்து டிரம்ப் மாறவில்லை, இதனை பிரான்ஸ் கடுமையாக கண்டித்துள்ளது.
இதுதொடர்பாக பிரான்ஸ் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீன் மார்க் ஐரால்ட் கூறுகையில், டொனால்ட் டிரம்ப் இந்த முடிவு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
இஸ்ரேல்- பாலஸ்தீனத்திற்கு இடையே உள்ள பிரச்சனையை தீர்க்க 70 நாடுகள் முன்வந்துள்ள நிலையில், அமைதியை ஏற்படுத்தவே அமெரிக்கா முயற்சிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தலைநிமிர வைத்த தமிழக இளைஞர்கள்: வட இந்திய பெண்ணின் பாராட்டு

தலைநிமிர வைத்த தமிழக இளைஞர்கள்: வட இந்திய பெண்ணின் பாராட்டு
தமிழகத்தில் நடைபெற்றும் வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர்களின் எழுச்சி மிகு போராட்டம் உலக மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த போராட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், நடிகர் சங்கம், பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சிகள் ஈடுபட்டாலும், இளைஞர்களின் கண்ணியமான நடவடிக்கையே பாராட்டை பெற்றுள்ளது.
சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுடன் சேர்ந்து களம் இறங்கினர். இருட்டி மெரினாவில் டார்ச் லைட் வெளிச்சத்தில் போராட்டத்தை நடத்தி வந்த இளைஞர்கள், பெண்களுக்கும் உரிய பாதுகாப்பை கொடுத்தது அனைவரையும் மெய்சிலிக்க வைத்தது.
பெங்களூரில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, இருட்டினை பயன்படுத்திக்கொண்ட இளைஞர்கள் பெண்களின் மீது பாய்ந்து தாக்குதலை நடத்தியுள்ளனர். பெங்களூர் மட்டுமல்ல இந்தியாவின் தலைநகரான டெல்லியிலும் இதுபோன்ற பாலியல் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
ஆனால், சென்னையில் நடைபெற்று வந்த இந்த தொடர் போராட்டத்தில், பெண்கள் கண்ணியமாக நடத்தப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டை விட ஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் அமைதியான போராட்டம் ஒட்டு மொத்த இந்தியாவுக்கு வியப்பை அளித்துள்ளது. நான்கு இளைஞர்கள் சேர்ந்தாலே, வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களைப் பார்த்துவிட்ட இந்தியாவுக்கு, தமிழ் இளைஞர்களின் அறவழிப் போராட்டம் பிரமிக்க வைத்துள்ளது.
இதனை வட இந்திய பெண் ஒருவர் பாராட்டியுள்ளார், பெண்களை மதிப்பதில் சென்னை ஆண்களிடம் இருந்து டெல்லிவாசிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென என்.டி.டி.வி எடிட்டோரியல் இயக்குநர் சோனியா சிங் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியா இலங்கை பிரதமர்கள் செய்யாததை கனடா பிரதமர் வெள்ளையாராக இருந்தும் செய்து காட்டியுள்ளார்.நன்றி

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் கொண்டாட்டம் இன்று உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் உலகம் முழுவது தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள அரசியல் பிரமுகர்கள் தமது வாழ்த்துச் செய்தியினை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ரூடோ கனடாவில் வாழும் தமிழ் மக்களுக்கு தனது பொங்கல் வாழ்த்தினை தமிழில் தெரிவித்துள்ளார்.
இந்திய, இலங்கை தலைவர்களிடம் இல்லாத பண்பும், அவரது தமிழ் பேசும் விதமும் தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
மேலும் கனடாவில் ஆண்டு தோறும் தை மாதத்தினை நாடளாவிய ரீதியில் தமிழர் மரபுகளை அனுஷ்டிப்பதற்குரிய மாதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய வசதியை அறிமுகப் படுத்தும் பேஸ்புக்

வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன் பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்பவானான பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கிவரும் ‘யூடியூப்’ நிறுவனம் வீடியோக்களின் இடையே விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றது. இந்த விளம்பரங்கள் மூலம் வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களும் வருமானத்தைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்றதொரு வசதியினை பேஸ்புக் நிறுவனம் விரைவில் வழங்கவுள்ளது.

இதன்படி, பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களின் இடையே விளம்பரங்களை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், இவ்வாறு விளம்பரங்கள் வரும் வீடியோக்களுக்கு என்று சில சிறப்பியல்புகள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் குறைந்தது 90 வினாடிகள் ஓடக் கூடியதாக இருக்க வேண்டும்.

இவ்வாறான வீடியோக்களின் இடையில் மாத்திரம் 15 வினாடிகள் ஓடக்கூடிய விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படும.

வழக்கமாக யூடியூப் வீடியோக்களில் ஆரம்பத்திலேயே விளம்பரங்கள் காட்சிப்படுத்துவது வாசகர்களுக்கு இடையூறாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி விளம்பரங்கள் அனைத்தும் பாரம்பரிய தொலைக்காட்சிகளில் வெளியாகும் விளம்பரங்களைப் போன்றே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விளம்பரங்களின் ஊடாக கிடைக்கும் லாபத்தில் 55 சதவீத தொகையை வீடியோக்களை வெளியிடும் நபர்களுக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் விளம்பரம் மூலமாக மட்டும் சுமார் 700 கோடி டாலர்(96 சதவீதம்) அளவுக்கு வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாய் வளர்ச்சியின் பெரும்பகுதி, கைபேசி மூலமாக வரும் விளம்பர வருவாய் என தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நிலவரத்தின்படி, நாளொன்றுக்கு 5 கோடி மக்கள் பேஸ்புக்கில் வீடியோக்களை காண்கின்றனர். அவர்கள் அனைவரும் வீடியோக்களை பார்க்கும் நேரம் அன்றாடம் சராசரியாக 10 கோடி மணிநேரமாக உள்ளது. இந்த பயன்பாட்டை சாதகப்படுத்திக் கொள்வதுடன் வருமானமாக்கும் முயற்சியில் பேஸ்புக் தற்போது களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும் அதிசய நாய்

தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும் அதிசய நாய்

உனக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன்

என் மகனே உனக்காக ஏங்குகிறேன். என் மகனே உனக்காக பரிதவிக்கிறேன் .என் மகனே உனக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன் .என் மகனே என் இதயத்தின் வலியை வேதனையை  கவலையை நீ புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாயே அதை உனக்கு புரியவைக்க என்னையே சிலுவை மரத்துக்கு  ஒப்புக்கொடுத்து கொடிய வேதனை அனுபவித்து எனது உடலை அணுவணுவாக கிழித்து கொள்ள ஒப்பு கொடுத்தேன் .நான் எனது மனதில் உன்னை இழந்ததால் எனது மனதும் இப்படியே ஒவ்வொரு கணபொழுதிலும் கிழிக்கபட்டு கொண்டிருக்கிறது .இந்த வலி வேதனையை எத்தனையோ தீர்க்கதரிசிகள் வாயிலாக பலமுறை கூறினேன் .நீயோ  அவர்களை  தூசித்தாய்  கேலி செய்தாய் ,அவமதித்தாய் ,துன்புறுத்தினாய் ஏன் கொலையும் செய்தாய் .இறுதியாக உனக்கு புரிய வைக்க நானே இறங்கி  வந்தேன் உவமைகள் வழியாக பேசினேன் .நீ உன் மூதாதையர் போல என்னையும் கேலி செய்தாய் .அவமரியாதை செய்து துன்புறுத்தினாய் .இறுதியாக சிலுவையில் என்னை கொலை செய்தாய் .நீ எனக்கு  செய்த அனைத்தையும் ஏற்றுக்கொண்டு  அதை நன்மையாக மாறினேன் .உன் மீது  எனக்கு எந்த கோபமும்  இல்லை அனைத்து மனிதர்களும் காண மிகவும் கேவலமாக அசிங்கமாக பயங்கர மரணத்தை இஸ்ரவேல் தேசத்தில் நான் அன்று இறந்தது எதற்காக  நீ என் தண்டனைக்கு தப்பி நீ என்னுடன் எனது இரட்சியத்தில்  நித்திய  நித்தியமாக என் கூடவே இருக்க வேண்டும் என்ற ஒரே காரணமே  அன்றி வேறு எந்த காரணமும் இல்லை .நீ செய்ய வேண்டியது எல்லாம்  உலகின் எந்த மூலையில் இருந்தாலும்  யேசுவே  நான் உம்மை மனபூர்வமாக சொந்த
இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன் .நீர் எனக்காக 2000 ஆண்டுகளிற்கு முன் மரித்ததை  ஏற்றுக்கொள்கிறேன் .அதற்காக நன்றி .நான்  உமக்காக  என்ன செய்ய  வேண்டும்  எனக்கு கற்பியும் ஆமேன் .
என்று மட்டும் சொல் நான் உனக்கு சகலத்தையும் போதிப்பேன் .  

முகநூலூடாக காதலித்த காதலனை சந்திக்க சென்ற தமிழ் பெண்ணுக்கு எற்ப்பட்ட விபரீதம்

“சகோதரிகள் கவனத்திற்கு” குறும்படம் இன்று 2017 புதுவருட வெளியீடாக வெளிவந்திருக்கிறது

வாட்ஸ் ஆப் பாவனையாளர்கள் அவதானம்

வாட்ஸ் ஆப் பாவனையாளர்களை  குறிவைத்து  சில இலவச ரீசாஜ் விளம்பரங்கள் மற்றும்  சில ஆசை வார்த்தைகளுடன் லிங்க் இருக்கும் நீங்கள் அதனை சொடுக்கினால்  உங்கள் கைபேசிக்கே ஆபத்தை உண்டு பண்ணலாம் அத்துடன் உங்கள் கைபேசி இலக்கம் ஹாக்  பணப்படலாம் எந்த  கைபேசி நிறுவனமும் இலவச ரீசாஜ் லிங்க் அனுப்புவது இல்லை இந்த லிங்க் அனைத்தும் போலியே அவதானம் 

ஏன் என் இதயத்தை இரண்டாக்கி சென்றாய்

உன் நினைவுகளால்
என்னை கொல்கிறாயே
சூரியன் வழுக்கி விழுந்தது
போல் நீயும் வந்து என்
மனசுக்குள் விழுந்தாய்
ஏன் என் இதயத்தை இரண்டாக்கி
சென்றாய் என் செல்லமே