தமிழ் மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சித் தீர்வை ஏற்க வைத்து தமிழரின் எதிர்காலத்தை அழிக்கவும் பொறுப்புக்கூறல் கடப்பாட்டிலிருந்து அரசு தப்பித்துக் கொள்ளவும் சம்பந்தனும் சுமந்திரனும் செயலாற்றுகின்றனர்
எதிர்காலத்தில் தமிழரின் அரசியல் தீர்வு மற்றும் இனஅழிப்பு தொடர்பான பொறுப்புக்கூறல் விடயங்களுக்கு என்ன நடைபெறப்போகின்றது என்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடகவியலாளர் மாநாடு ஒன்றினை நடாத்தியது. கடந்த 20-7-2016 அன்று கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இணைந்து நடாத்திய ஊடக மாநாட்டிலேயே கருத்துக் கூறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சித் தீர்வை ஏற்க வைத்து தமிழரின் எதிர்காலத்தை அழிக்கவும் பொறுப்புக்கூறல் கடப்பாட்டிலிருந்து அரசு தப்பித்துக் கொள்ளவும் சம்பந்தனும் சுமந்திரனும் அரசுடன் இணைந்து செயலாற்றுகின்றனர் எனக் குற்றம் சுமத்தியுள்ளார். அவர ஊடகங்களுக்கு கூறிய கருத்துக்களின் முழுமையான விபரங்களுக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
0 comments:
Post a Comment