ஊர்தோறும் எமது அவலம் உரைத்திடுவோம்

இனமானம் காப்பதற்கு கொடிபிடித்து நாள்தோறும்
குவலயத்தில் பவனிவந்து குறை மறக்கத் துடிக்கின்றார்.
தெம்பிழந்து நாம் வாழத் தினந்தோறும் வழிசொல்லி 
திகைப்பூட்டி தீதுசெய்ய தூண்டுகின்ற காலமிது ! 
நம்பிக்கை வாழ்வை இன்று நசுக்கிடும் காரணிகள் 

 நடைபோடும் காலமிது ! நலம்மாய்க்கும் நேரமிது !
உறக்கத்தைக் கலைத்திடுவோம்
ஊர்தோறும் எமது அவலம்  உரைத்திடுவோம்
உலக மொழிகளில் எமது அவலம்  பெயர்த்திடுவோம் 
ஒற்றுமையை  வளர்த்து  இலக்கை வென்றிடுவோம்.

2 comments:

  1. real and gud words.bt without unity how to achieve this ?

    ReplyDelete
  2. தென்காசித் தமிழ்ப் பைங்கிளி @ பெருமகிழ்ச்சி அடைந்தேன் பைங்கிளி நன்றி. என்னையும் அறிமுகபடுத்தியமைக்கு தங்களை போன்றவர்கள் வாழும் வரை தமிழ் அழியாது வாழ்த்துகள்.

    ReplyDelete