பாரிசில் தொடரும் தேடுதல் வேட்டை!! - மேலும் ஒரு பயங்கரவாதி கைது!
RAiD படையினரின் அதிரடி சோதனை நடவடிக்கைகளில், நேற்று பயங்கரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். சனிக்கிழமை, நண்பகலில் Ariege மாவட்டத்தின் Pamiers ( Foix) பகுதியில் வைத்து இக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட RAiD படையினர், சமூகவலைத்தளத்தினூடாக பெறப்பட்ட தகவலின் ஆதாரத்திலேயே மேற்படி நபரை கைது செய்துள்ளார்கள்.
இஸ்லாம் மதத்துக்காக கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், தீவிர இஸ்லாத்தை சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் பரப்பியதாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. Foix நகர அரச வழக்கறிஞர் Karline Bouisset தெரிவிக்கும் போது, நேற்று சனிக்கிழமை பேஸ்புக்கில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாக தகலவ் கிடைத்ததும், அச்சுறுத்தல் விடுத்த நபரை RAiD படையினர் கைது செய்துள்ளனர் என தெரிவித்தார்.
மேலும், பிந்திக்கிடைத்த தகவல்களின் படி, கைதுசெய்யப்பட்ட நபர், ஏற்கனவே கடந்த ஜனவரியிலும் கைது செய்யப்பட்டிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment