தேவன் ஏன் என்னை கைவிட்டார்? .நான் என்ன பாவம் செய்தேன் ?


துன்ப துயரங்கள் ஒரு சில மனிதர்களை தொடர்ந்து சங்கிலி தொடர் போல தாக்கும் இவ்வேளையில்  தேவன் ஏன் என்னை கைவிட்டார் .நான் என்ன பாவம் செய்தேன் என மனதில் எண்ணம்  வருவது  இயல்பு இந்த நேரத்தில் கடவுள் எப்படி தனது  பிள்ளைகளை பாதுகாக்கிறார்? 
உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.

தேவன் ஏன் என்னை கைவிட்டார்? .நான் என்ன பாவம் செய்தேன் ?

துன்ப துயரங்கள் ஒரு சில மனிதர்களை தொடர்ந்து சங்கிலி தொடர் போல தாக்கும் இவ்வேளையில்  தேவன் ஏன் என்னை கைவிட்டார் .நான் என்ன பாவம் செய்தேன் என மனதில் எண்ணம்  வருவது  இயல்பு இந்த நேரத்தில் கடவுள் எப்படி தனது  பிள்ளைகளை பாதுகாக்கிறார்? 
உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.

பாதாம் பருப்பின் மருத்துவ குணங்கள்

பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது!

இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக் குறையுமாம். எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை ஐந்தைந்து பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம். பாதாம் எடுக்காதவர்களைவிட, பாதாம் எடுப்பவர்கள் ஒல்லியாகவே இருப்பார்கள்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏறாமல் தவிர்க்கவும் பாதாம் உதவுகிறது. சாப்பாட்டுக்குப் பிறகு ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பதைத் தவிர்ப்பதால் நீரிழிவுக்காரர்கள், எடைக் குறைக்க நினைப்பவர்கள், இதய நோயாளிகள் என எல்லோருக்கும் ஏற்றதாக இருக்கிறது பாதாம். நீரிழிவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தினமும் 5 பாதாம் எடுத்துக் கொள்ளலாம். அதை ஊற வைத்தோ, அப்படியேவோ சாப்பிடலாம்.


பாதாம், மூளைக்கேற்ற உணவும் கூட. பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை.

வயோதிகத்தில் வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோயைத் தவிர்ப்பதில் பாதாம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அதை இள வயதிலிருந்தே எடுத்துப் பழக வேண்டும். நினைவுக்கூர்மையுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால்தான், படிக்கிற பிள்ளைகளுக்குப் பாடங்கள் மறக்காமலிருக்க பாதாம் கொடுக்கச் சொல்கிறோம். முறையாக பாதாம் சாப்பிடுகிற பிள்ளைகளின் மூளையானது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

பாதாமில் உள்ள வைட்ட மின் இ சத்தானது, சருமத்துக்கும் கூந்தலுக்கும் மிக நல்லது. சரும நிறத்தை மேம்படுத்தும். சருமத்தைப் பளபளப்பாக வைக்கும். ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். வயோதிகத்தைத் தள்ளிப்போடும். கண்களுக்குக் கீழே கருவளையங்களை விரட்டும்.

பாதாம் ஆயிலை வெதுவெதுப்பாக சூடாக்கி, இரவில் தலையில் தடவிக் கொண்டு, மசாஜ் செய்துவிட்டு, காலையில் தலையை அலசி விடவும். சமையலுக்குக் கூட பாதாம் எண்ணெய் பயன்படுத்தலாம். அதை மற்ற எண்ணெய்களைப் போல கொதிக்க வைக்கவோ, தாளிக்கவோ, பொரிக்கவோ பயன்படுத்த முடியாது. ஆலிவ் ஆயிலை போல சாலட்டுக்கு ஊற்ற மட்டுமே பயன்படுத்தலாம்.

ராஜபக்ச்சே சிங்களரா தெலுங்கரா வாய் திறப்பாரா வரலாற்றுப் புலி வை கோ

ராஜபக்ச்சே சிங்களரா தெலுங்கரா வாய் திறப்பாரா வரலாற்றுப் புலி வை கோ   

23 ஏப்., 2016 அன்று வெளியிடப்பட்டது இலங்கையின் ஆளும் வர்க்கம் தெலுங்கரே! ஈழத்தில் தமிழினப் படுகொலை செய்தவர் தெலுங்கரே! அதிர வைக்கும் உண்மைகளைக் காண்பீர்! தமிழரிடத்தில்
பரப்புவீர்!
கண்டி நாயக்கர் வரலாறு காணொளியின் இரண்டாம் பகுதி. அறிவோம் திராவிடரை! கருவறுப்போம் அவரது மேலாதிக்கத்தை! வென்றெடுப்போம் தமிழரின் அரசியல் அதிகாரத்தை! காத்திடுவோம் தமிழினத்தை!
  

AUGUSTINE JEBAKUMAR TESTIMONY

AUGUSTINE JEBAKUMAR TESTIMONY 

உன்னைக் கர்த்தரின் தோட்டமாய் மாற்றுகிறார்

உன்னைக் கர்த்தரின் தோட்டமாய் மாற்றுகிறார்

எழுந்து பெத்தேலுக்கு போ அதுதான் தகப்பன் வீடு

எழுந்து பெத்தேலுக்கு போ அதுதான் தகப்பன் வீடு நன்மைகள் பல செய்த நல்லவர் இயேசுவுக்கு நன்றி பாடல் பாடணும் துதி பலிபீடம் கட்டணும்   ஆபத்து நாளிலே பதில் தந்தாரே அதற்கு நன்றி சொல்வோம் நடந்த பாதையெல்லாம் கூட வந்தாரே அதற்கு நன்றி சொல்வோம்   அப்பா தகப்பனே நன்றி நன்றி -2 எழுந்து பெத்தேல் செல்வோம்   போகுமிடமெல்லாம் கூடயிருந்து காத்துக் கொள்வேனென்றீர் சொன்னதைச் செய்து முடிக்கும் வரைக்கும் கைவிட மாட்டேனென்றீர்   பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும் ஆதரித்த ஆயரே ஆபிரகாம் ஈசாக்கு வழிபட்டு வணங்கிய எங்கள் தெய்வமே   எல்லா தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்டீரையா வாழ்நாள் முழுவதும் மேய்ப்பனாயிருந்து நடத்தி வந்தீரையா   படுத்திருக்கும் இந்த பூமி சொந்தமாகும் என்று வாக்குரைத்தீரையா பலுகிப் பெருகி தேசமாய் மாறுவோம் என்று வாக்குரைத்தீரையா   அந்நிய தெய்வங்கள் அருவருப்புகள்  அகற்றி புதைத்திடுவோம் ஆடை மாற்றுவோம் தூய்மையாக்கும்வோம் பாடிக் கொண்டாடுவோம்   வெறுங்கையோடு பயந்து ஓடிய யாக்கோபை தெரிந்து கொண்டீர் இஸ்ராயேல் இனமாய் ஆசீர்வதித்து பலுகிப்பெருகச் செய்தீர் 

இனப்படுகொலைக்குத் துணை நின்றது கருணாநிதியா மு.க.ஸ்டாலினா ?

இலங்கை ராணுவத்தால், 2008-2009ல், விலங்குகளைப் போல் தமிழர்கள் வேட்டையாடப்பட்ட போது, அங்கே அதிபராக இருந்தது மகிந்த ராஜபக்ச. இங்கே முதல்வராக இருந்தவர், கலைஞர் கருணாநிதி. 26வது மைலில் நடந்த இனப்படுகொலையைத் தடுத்துநிறுத்த கருணாநிதி தவறிவிட்டார் – என்கிற குற்றச்சாட்டை அவரது ஆதரவாளர்களாலேயே கூட மறுக்க முடியவில்லை. அதேசமயம், அவரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளையும் அவர்கள் விட்டுவிடவில்லை.

‘இந்தியாவே மறைமுகமாகப் போரை நடத்திய நிலையில், கலைஞரால் என்னதான் செய்திருக்க முடியும்’ என்பது ஆதரவாளர்களின் கேள்வி. ‘இனப்படுகொலை நடந்த கடைசி 5 மாதங்களில், உடல்நலக்குறைவின் காரணமாக, பதவி நாற்காலியில் உட்கார்ந்திருந்தாரே தவிர, முதல்வர் பணியில் கலைஞரால் முழுமையாக ஈடுபட முடிந்ததா’ – என்கிற துணைக்கேள்வியையும் தூக்கிவைக்கிறார்கள்.

அவர்கள் சொல்வதை ஒரேயடியாக மறுத்துவிட முடியவில்லை. அந்தக் காலகட்டத்தில், ஸ்டாலின் கையில் தான் லகான் இருந்தது. இதுதான் உண்மை.

மனித உரிமை மீறல்களுக்காக மகிந்த ராஜபக்ச மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், தம்பி கோதபாய ராஜபக்ச மீதும் வைக்கப்படுகின்றன. ‘மகிந்த ராஜபக்ச வெறும் டம்மி, கோதபாய தான் சூத்திரதாரி’ என்கிற குற்றச்சாட்டு வலுவடைந்து வருகிறது. சற்றேறக்குறைய தமிழ்நாட்டுக்கும் இது பொருந்துவதுதான் கொடுமை.

அங்கே இனப்படுகொலை தீவிரமாக நடைபெற்ற சமயத்தில், இங்கே தொடர்ச்சியாக 34 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார் கலைஞர். அதைத் தொடர்ந்து கட்டாய ஓய்வு. அந்தக் காலக்கட்டத்தில் ஸ்டாலினைத் தவிர வேறு எவர் கையில் லகான் இருந்திருக்க முடியாது. லகான் கையிலிருந்தபோது அவர் என்ன செய்தார் என்பதுதான் கேள்வி.

2009 ஜனவரி 26ம் தேதி ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார், முதல்வர் கருணாநிதி. மூன்றாவது நாள், 29ம் தேதி ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தீக்குளிக்கிறான், முத்துக்குமார் என்கிற அறிவாற்றல் மிக்க இளைஞன். உயிர் பிரியும் தருவாயிலும், ‘என் சாதி தமிழ்ச்சாதி’ என்று பிரகடனம் செய்த அவனது உடல் அன்று இரவே சென்னை கொளத்தூரில் வைக்கப்படுகிறது. அன்று நடந்த எதையுமே மறக்க முடியவில்லை, இன்று வரை!

சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்தான் தீக்குளிக்கிறான் முத்துக்குமார். பதற்றம் சிறிதுமின்றித் தன் உடலுக்குத் தானே கொள்ளிவைத்துக் கொள்கிறான். அதற்குமுன் ‘எதற்காகத் தீக்குளிக்கிறேன்’ என்கிற விரிவான அறிக்கை ஒன்றை அந்தப் பகுதி முழுக்க விநியோகிக்கிறான்.

தீயில் கருகிய முத்துக்குமாரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிற அவசரத்தில் கூட, அவனது அறிக்கையின் நகல்களை வைத்திருந்தவர்களிடமிருந்து அதைப் பறித்தது காவல்துறை. விசுவாசப் பிராணிகளான காவல்துறை அதிகாரிகள் எவராவது அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்பதால், இன்னார்தான் காரணம் என்று குற்றஞ்சாட்ட முடியவில்லை.

ஆனால், அன்று மாலை, முத்துக்குமாரின் உடல், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலிருந்து கொளத்தூருக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, காவல்துறை அதிகாரிகள் அத்துமீறி நடந்து கொண்டதற்கு யார் காரணம்? அதற்கான உத்தரவு கோட்டையிலிருந்து வராமல், ராமச்சந்திரா மருத்துவமனையிலிருந்தா வந்திருக்க முடியும்! அப்போது கோட்டையில் கொலுவிருந்த பிரகஸ்பதி யார்?

அன்று இரவு, அடுத்த தாக்குதலை ஆரம்பித்தது காவல்துறை. கொளத்தூரில் முத்துக்குமார் உடல் வைக்கப்பட்ட இடத்திலேயே, ‘உங்களுக்கு அவரைத் தெரியுமா’ ‘காதல் தோல்வி ஏதாவது காரணமா’ என்றெல்லாம் உளவுத்துறை விசாரிக்கத் தொடங்க, திரண்டிருந்த மக்கள் அவர்களை விரட்டியடித்தார்கள்.

தீக்குளிக்கும் முன் முத்துக்குமார் எழுதியிருந்த மரண சாசனம், ஈழத் தமிழர் பிரச்சினை குறித்த சுருக்கமான ஆய்வறிக்கை. இதயத்தை உலுக்கும் அந்த மரண சாசனத்தைப் படித்த பிறகும், ‘காதல் தோல்வி காரணமா’ என்றெல்லாம் காவல்துறை விசாரித்ததென்றால், அதற்கு யார் காரணம்? அதற்கான உத்தரவு கோட்டையிலிருந்து வந்ததா? மருத்துவமனையிலிருந்து வந்ததா? அப்போது லகான் யார் கையில் இருந்தது?

ஜனவரி 31ம் தேதி, பேப்பர் மில்ஸ் ரோடு – குக்ஸ் ரோடு – ஓட்டேரி – புரசைவாக்கம் – சூளை வழியாக மூலக்கொத்தளம் மயானத்துக்கு அவனது தியாகத் திருவுடல் எடுத்துச் செல்லப்படும் என்று காவல்துறைக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் அதற்கு எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.

இறுதி ஊர்வலம் ஆரம்பித்தபிறகு, கடைசி நொடியில், பேப்பர் மில்ஸ் ரோடு திருப்பத்தில் இறுதி ஊர்வலத்தை மறித்து, ஓட்டேரி – புரசைவாக்கம் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்து, ‘ஆளரவமற்ற பேசின்பிரிட்ஜ் பாலம் வழியாகத்தான் போகவேண்டும்’ என்று வலுக்கட்டாயமாகக் காவல்துறை திருப்பி விட்டதே…… அந்தத் திடீர்த் திருப்பத்துக்கு யார் காரணம்? அப்போது லகான் யார் கையில் இருந்தது?

‘ஈழத்து உறவுகளுக்காக ஓர் இளைஞன் உயிர்த்தியாகம் செய்திருக்கிறான்’ – என்கிற செய்தி கூட மக்களைப் போய்ச் சேர்ந்துவிடக் கூடாது என்பதுதான் இறுதி ஊர்வலத்தைத் திருப்பி விட்டவர்களின் நோக்கம். அவர்கள் யார்? அதற்கான உத்தரவு கோட்டையிலிருந்து வந்ததா? மருத்துவமனையிலிருந்து வந்ததா? அப்போது லகான் யார் கையில் இருந்தது?

முத்துக்குமார் ஏற்படுத்திய எழுச்சி மாணவர்களிடையே தீப்பொறியாகப் பரவிய நிலையில், அதைத் தடுத்துநிறுத்த, கல்லூரிகளை மூடியதுடன் நின்றுவிடாது, கல்லூரி விடுதிகளையும் மூடுவதென்ற முடிவை யார் எடுத்தது? ராமச்சந்திரா மருத்துவமனையிலிருந்து முதல்வர் கருணாநிதியே அந்த முடிவை எடுத்தாரா? லகானைக் கையில் வைத்திருந்தவர் எடுத்தாரா?

மாணவர் போராட்டங்கள் மூலம், இனப்படுகொலைக்கு எதிரான எழுச்சி கூர்மையடைந்துவிடக் கூடாது – என்கிற அந்த இரக்கமற்ற முடிவுக்கு இருவரில் யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்?

முத்துக்குமாரின் உடல் தகனம் செய்யப்பட்ட அன்று, திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரவி என்கிற ஈழ ஆதரவாளர், தீக்குளித்தார். 80 சதவிகித தீக்காயம். மதுரை அரசினர் மருத்துவமனையில் பிப்ரவரி 2ம் தேதி அவர் உயிர் பிரிந்தது.

ரவி விஷயத்திலும் காவல்துறை மூக்கை நீட்டியது. குடும்பப் பிரச்சினைகளாலேயே ரவி தீக்குளித்தார், ஸ்டவ் வெடித்துத் தீப்பிடித்தது – என்றெல்லாம் கட்டுக்கதைகளைப் பரப்பப் பார்த்தது. கணவனின் தியாகத்தைக் கொச்சைப்படுத்த முயன்ற காவல்துறையின் அராஜகத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல், அந்தச் சூழலிலும், ரவியின் மனைவி சித்ரா பேசவேண்டியிருந்தது.

கணவருடன் எந்தப் பிரச்சினையும் இல்லை, வீட்டில் ஸ்டவ் இல்லை, முத்துக்குமாரின் உயிர்த் தியாகத்தால் ரவி மனமுடைந்து போயிருந்தார் – என்கிற உண்மைகளை சித்ரா தெரிவித்தபோதுதான் காவல்துறையின் கயமைத்தனம் அம்பலமானது. தனது மகனுக்கு பிரபாகரன் என்று ரவி பெயரிட்டிருந்தார். சித்ரா தெரிவித்த தகவல் அனைத்துக்கும் சான்றாகத் திகழ்ந்தது, அந்தப் பெயர்.

ஈழத் தமிழருக்காக உயிர்த் தியாகம் செய்கிற போக்கு, அத்துடன் நின்றுவிடவில்லை. கலைஞர் மருத்துவமனையிலிருந்து வெளியே வருவதற்குள், சீர்காழியில் ரவிச்சந்திரன், சென்னையில் அமரேசன் – சிவப்பிரகாசம், கடலூரில் தமிழ்வேந்தன், விருதுநகரில் கோகுலகிருஷ்ணன் என்று உயிர்த்தியாகம் தொடர்ந்தது. மருத்துவமனையிலிருந்து கலைஞர் வெளியே வந்த மார்ச் ஒன்றாம் தேதியன்று கூட, வாணியம்பாடியில் சீனிவாசன் தீக்குளித்தார்.

தீக்குளித்த ஒவ்வொருவரையும் கொச்சைப்படுத்தவே முயன்றது காவல்துறை. முத்துக்குமாரைப் போலவே, பெரியவர் அமரேசனும் மரண சாசனம் எழுதிவைத்திருந்தார். அதன் நகல்களைக் கைப்பற்றி அழித்தேவிட்டது காவல்துறை.

சொந்த இனத்துக்காக உயிரையே நீத்த தியாகிகளை மதிப்பதோ மதிக்காததோ தனிநபர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. ஆனால், அவர்களை அவமதிக்க எவருக்கும் அதிகாரமில்லை. அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் காவல்துறை செயல்பட்டதற்கு யார் காரணம்? அப்போது லகான் யார் கையில் இருந்தது?

முக்கடல் சங்கமிக்கும் குமரிமுனையில் கரைப்பதற்காக, சென்னையிலிருந்து முத்துக்குமாரின் அஸ்தி எடுத்துச் செல்லப்பட்டபோது என்ன நடந்ததென்பது பலருக்கும் நினைவிருக்கும். திருநெல்வேலியில் வைத்து, அந்த அஸ்தியைக் கைப்பற்ற காவல்துறை முயன்றது.

அஸ்திக்கலசங்களுடன் சென்னையிலிருந்து வந்திருந்த உணர்வாளர்கள் தங்கியிருந்த திருமண மண்டபம், ஆயுதம் தாங்கிய காவலர்களால் நள்ளிரவில் சுற்றிவளைக்கப்பட்டது. மண்டபம் உள்பக்கம் பூட்டப்பட்டிருந்ததால், கதவைத் திறக்கும்படி உள்ளேயிருந்தவர்களை மிரட்டினர் காவல்துறை அதிகாரிகள்.

ஒரு மாவீரனின் அஸ்தியை ஆயுதங்களைக் காட்டி அபகரிக்க மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான நடவடிக்கை அது. முத்துக்குமாரின் மரணசாசனத்தைப் பார்த்து மிரண்டவர்கள், அவனது அஸ்தியைக் கண்டும் மிரண்டார்கள்.

காவல்துறையின் அந்த அடாவடித்தனத்தைத் தகர்த்தவர்கள், சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள்தான்! அந்த நள்ளிரவில், அவர்களது முயற்சியால், அரைமணி நேரத்துக்குள் நெல்லை பத்திரிகையாளர்கள், அந்தத் திருமண மண்டபத்தின் முன் திரண்டுவிட்டனர். பத்திரிகையாளர்களைப் பார்த்தவுடன், காற்றால் கிழிக்கப்பட்ட மேகம் போல காவல்துறையினர் காணாதுபோய்விட்டனர்.

பத்திரிகையாளனான முத்துக்குமாரின் மரணசாசனம் நம் கைக்குக் கிடைக்கக் காரணமாக இருந்தவர்கள், சென்னைப் பத்திரிகையாளர்கள் தான். அவனது அஸ்தியை, நெல்லைப் பத்திரிகையாளர்களுடன் இணைந்து காப்பாற்றினார்கள் அவர்கள். காவல்துறையின் கோழைத்தனமான முற்றுகையைப் பத்திரிகையாளர்கள் உடைத்த வரலாறு இது.

முத்துக்குமாரின் அஸ்தியைக் கைப்பற்ற, தமிழகக் காவல்துறை தலைகீழாக நின்றதற்கு யார் காரணம்? மிக மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவராக நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டிய கலைஞர் கருணாநிதி அப்போது மருத்துவமனையில் தான் இருந்தார். அந்த நிலையில், அப்படியொரு கோழைத்தனத்தை அரங்கேற்றுவதற்கான உத்தரவு ராமச்சந்திரா மருத்துவமனையிலிருந்து தான் வந்ததா? லகானைக் கையில் வைத்திருந்தவர்களின் கோட்டைக்குள்ளிருந்து வந்ததா?


கலைஞர் மருத்துவமனையில் இருந்த சமயத்தில் நிகழ்ந்த இன்னொரு கொடூரமான சம்பவம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது பிப்ரவரி 19ம் தேதி நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல். நிராயுதபாணிகளாக இருந்த வழக்கறிஞர்களை, வெறிபிடித்தவர்களைப் போல அடித்து நொறுக்கியது காவல்துறை. நீதிமன்ற வளாகம் ரத்தக் களரியானது.

அது, ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கக் கோரி போராடிய குற்றத்துக்காக வழக்கறிஞர்களுக்கு அரசு கொடுத்த தண்டனை. கோட்டையிலிருந்து அனுமதி பெறாமல் அந்தக் கொலைவெறித் தாக்குதல் எப்படி நடந்திருக்கும்? அப்போது கோட்டையில் இருந்தவர் யார்? லகான் யார் கையில் இருந்தது?

இனப்படுகொலையை நிறுத்த ராஜபக்சவே கொடுத்த ஒரே ஒரு வாய்ப்பும் அந்தக் காலக்கட்டத்தில்தான் வீணடிக்கப்பட்டது. ‘இனப்படுகொலையெல்லாம் நடக்கவில்லை…. வேண்டுமானால் தமிழக முதல்வரே நேரில் வந்து பார்க்கட்டும்…. அவரை வரவேற்கக் காத்திருக்கிறோம்’ என்று இலங்கை அரசு அழைத்தது. ‘உடல்நலமின்றி இருக்கும் கலைஞர் வரப்போவதில்லை’ என்கிற திமிரில் அப்படி அழைத்தது அது.

‘இந்த வாய்ப்பைத் தவற விடக்கூடாது. ஸ்டாலின் தலைமையில், மத்திய அமைச்சர் அன்புமணி உள்ளிட்டோரை அடக்கிய ஒரு குழு உடனடியாக இலங்கை போகட்டும். சாலை வழியாகப் போனால்தான் போர்ப் பகுதிகளைப் பார்க்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தால், இலங்கை அதை மறுக்க முடியாது. அப்படிப் பார்வையிட ஒரு வார காலமாகலாம். அதுவரை தாக்குதல் நிறுத்தப்படும். ஸ்டாலின் முதலானோர் அங்கே நிற்கிறபோது, வானிலிருந்து குண்டுவீச இலங்கை நிச்சயமாக முயலாது’ என்பதையெல்லாம் தகுதி வாய்ந்த ஒரு பேராசிரியர் மூலம் அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல முயன்றோம்.

பேராசிரியர் சொன்னதை ஆட்சியாளர்கள் காதில் வாங்கவில்லையோ என்னவோ, அதற்குப் பிறகு அவர் எங்களுடன் பேசவேயில்லை. அந்த முயற்சி வெற்றி பெற்றிருந்தால், இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்திய பெருமை ஸ்டாலினுக்குக் கிடைத்திருக்கும். செய்த துரோகத்தை மறைப்பதற்காக, ஆசிரியர்களுடன் போய் ஐ.நா.வில் மனுகொடுக்கும் போலி நாடகமெல்லாம் தேவைப்பட்டிருக்காது.


இனப்படுகொலை நிகழ்ந்த காலக்கட்டத்தில், கலைஞர் மருத்துவமனையிலோ ஓய்விலோ இருக்க, பெருமளவு நாட்கள் ஸ்டாலின் கையில்தான் லகான் இருந்தது. ராஜபக்சக்களை ஆயுதங்களால் ஆசீர்வதித்தவர்களின் ஏஜென்டுகளோடு சேர்ந்து பேரணி நடத்தியபடியே, இனப்படுகொலையை நிறுத்தக் குரல் கொடுத்தவர்களின் மென்னியை முறித்தார் அவர்.

இனப்படுகொலைக்கு எதிராகத் தமிழகத்தில் எழுந்த கொந்தளிப்பை இரும்புக்கரம் கொண்டு அடக்கியதற்காகவோ என்னவோ, அது முடிந்த கையோடு மே 29ம் தேதி துணை முதல்வர் பொறுப்பு ஸ்டாலினுக்குத் தரப்பட்டது. அதற்குமுன்பு அதிகாரபூர்வமற்ற முதல்வராகவே இருந்தவர், அதிகாரபூர்வ துணை முதல்வரானது இப்படித்தான்!

ஈழப் பிரச்சினைக்காக தமிழகத்திலிருந்து யாரும் குரல் கொடுத்துவிடக் கூடாது – என்று ஸ்டாலின் நினைத்தது எதனாலென்று இன்றுவரை புரியவில்லை. அப்பாவைப் போலவே, ‘பிரபாகரன்தான் பிரச்சினை’ என்கிற தவறான புரிதல் அவருக்கும் இருந்ததா? தெரியவில்லை.

இவ்வளவுக்குப் பிறகும், கொளத்தூரில் தான் நிற்பேனென்று பிடிவாதம் பிடிக்கிறார் தளபதி. உண்மையில், அது முத்துக்குமாரின் தொகுதி. அந்த மாவீரனின் உடலை மூன்று நாட்கள் மடியில் கிடத்தியிருந்த மண். அந்த மண்ணை மிதிப்பதற்கான தார்மீக உரிமை தலைவர் கருணாநிதியின் தளபதியான மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறதா?

– புகழேந்தி தங்கராஜ்

சிந்தனயை பற்றிய சிந்தனை


விசாரமான பாடல்கள் இன்றைய சூழலில் பிரபலம் ஆவது எப்படி ? மனதில் தற்கொலை எண்ணங்கள் வருவது எப்படி இதனை வெற்றி கொள்வது எப்படி ?   

சிந்தனயை பற்றிய சிந்தனை

விசாரமான பாடல்கள் இன்றைய சூழலில் பிரபலம் ஆவது எப்படி ? மனதில் தற்கொலை எண்ணங்கள் வருவது எப்படி இதனை வெற்றி கொள்வது எப்படி ?   

வீடியோ எடிட்டிங் செய்ய

இத்தளத்திற்கு சென்று http://www.aimersoft.com/video-editor.htmlஎன்ற பொத்தானை சொடுக்கி இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை  தறவிரக்கலாம். பலவிதமான நுனுக்கமான சேவைகள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவே இருக்கின்றது ஒருமுறை நாம் பயன்படுத்திவிட்டால் அது கொடுக்கும் சேவையால் மேலும் நம்மை  ஈர்க்கிறது. வீடியோ எடிட்டிங் செய்ய தெரியாது என்று சொல்லும் நண்பர்களுக்குக் கூட எப்படி வீடியோ எடிட் செய்யலாம் என்று அழகாக சொல்லியும் கொடுக்கிறது.
Aimersoft video editor crack Licensed e-mail: w2mlh@popgx.com
 Registration code: DA510E9A01FF1D1601591576B58D100B

கள்ள உபதேசங்கள் ஒவ்வொரு கிறிஸ்தவனும் கட்டாயம் பார்க்க வேண்டியது

கள்ள உபதேசங்கள் எப்படி சபைக்குள் நுழை கிறது அதன் வகைகள் எவை  ஒவ்வொரு கிறிஸ்தவனும் கட்டாயம்  பார்க்க வேண்டியது  To skip to message 1:23:40
Opening Prayer 03:28
Praise and worship 15:00
Prayer session 55:48
Offering song 2:26:05
Closing prayer 2:28:57

எனது பார்வையில் சாது ஐயா

சாது  ஐயா இவரை பற்றி பல விமர்சனங்கள் இணையத்தில் உள்ளது .ஆனால் எனக்கு அதில் ஒன்றும் உடன்பாடு இல்லை நான் 2009 இல்  இலங்கையில் இருந்தபோது எனது  குடும்ப   பொருளாதார நிலை காரணமாகவும் இலங்கையில்  யுத்தம் கடுமையாக  இருந்தமையாலும் என்னை வெகுவாக பாதித்தது .இந்த  நிலையில் பல  தொலைகாட்சில் வரும் அனைத்து  கிறிஸ்தவ நிகழ்சிகளை பார்ப்பேன். அதில் வரும் சகல ஊழியகாரரின் மினஞ்சல்  முகவரியை  குறித்து கொள்வேன் பின்னர் எனது நிலமையை விளக்கி எனக்காக செபிக்கும்படி    மினஞ்சல்  அனுப்புவேன். ஆனால் பெரும்  பாலான  ஊழியகார் எனக்கு  பதில் மினஞ்சல்  அனுப்பதால்  நான் ஏமாந்து  போனது உண்டு ஆனால் சாது  ஐயா மட்டும் பதில் அனுப்புவதுடன் ஆறுதல் செய்தியுடன் தான் செபித்த செபத்தையும் அனுப்பி என்னையும் செபிக்க சொல்லுவார்.இதனால் நான் பெரிதும் தேற்றபட்டதுடன். செபிக்கவும் கற்று பல பரலோக அனுபவ்களை பெற்று கொண்டதுடன் இன்று பலருக்கு
ஆசீர்வாதமாக  உள்ளேன்.இவரை தந்தமைக்கு தேவனுக்கு ஸ்த்திரம்    

புகைப்படங்கள் மற்றவர்களை கவருவதாக இருக்க

அனைவருக்கும் தங்களது புகைப்படங்கள் மற்றவர்களை கவருவதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். 
ஆனால் ஒரு சில படங்கள் அழகு குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட படங்களை அழகுபடுத்த நாம் போட்டோசாப் போன்ற எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும். ஒரு சிலருக்கு போட்டோசாப் மென்பொருளில் எவ்வாறு பணிபுரிவது என்பது தெரியாது. 
அப்படிப்பட்டவர்களுக்கெனவே

உள்ளது தான் போட்டோசைன் என்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானதாக இருக்கும். நம்முடைய நண்பர்களை செல்போன் மூலமாக படம் எடுத்து வைத்திருப்போம் பின்பகுதி(Background) மோசமான நிலையில் இருக்கும். அப்படிப்பட்ட  புகைப்படங்களை இந்த மென்பொருளின் மூலமாக மெறுகேற்ற முடியும்.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த மென்பொருளானது இரண்டு விதமாக உள்ளது மினி வெர்சனாகவும், மற்றொன்று முழுவதுமாகவும் உள்ளது. மினி வெர்சன் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். 
முழு போட்டோசைன் மென்பொருளை பணம் செலுத்தியே பெற வேண்டும். மினிவெர்சனில் வெறும் 237 டெம்ப்ளேட்கள் மட்டுமே உள்ளது. ஆனால் முழு போட்டோசைன் மென்பொருளில் 700 க்கும் மேற்ப்பட்ட டெம்ப்ளேட்கள் உள்ளது. 

இந்த மென்பொருளானது போட்டோக்களை அழகுபடுத்த பயன்படுகிறது. ஒன்றுக்கும் மேற்ப்பட்ட புகைப்படங்களை ஒண்றினைக்கவும் இந்த புகைப்படம் உதவுகிறது. நண்பர்களின் குழு புகைப்படத்தையும் இந்த மென்பொருள் மூலமாக உருவாக்க முடியும்

விரைவில் வாட்ஸ் அப்பில் இருந்து தரை வழி போன்களுக்கும் பேசும் வசதி

 போட்டோ, வீடியோக்கள் போன்றவற்றை கண் இமைக்கும் நேரத்தில் நண்பர்களுக்கு அனுப்ப உதவும் தகவல் தொழில்நுட்பப் புரட்சி சாதகமாக கருதப்படுகிறது .வாட்ஸ் அப்‘ பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.வாட்ஸ் அப். வாட்ஸ் அப் வசதி தற்போது செல்போன்களுக்கு இடையே
மட்டுமே தகவல்கள் பறிமாறி கொள்ளப்படுகிறது. விரைவில் வாட்ஸ் அப்பில் இருந்து தரை வழி போன்களுக்கும் பேசும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
4ஜி நெட்ஒர்க் வசதியுள்ள ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் இந்த வசதியை விரைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் டெலிபோன்கள் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் டெலிபோன்களில் இந்த வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதன் மூலம் டெலிபோன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க ‘டிராய்’ முடிவு செய்து இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மாதுளம்பழத்தின் மருத்துவ குணங்கள்

மாதுளம்பழத்தின் பூ பிஞ்சு, காய், இலை, பட்டை, பழம், தோல் முதலிவையும் மருத்துவ தன்மை வாய்ந்தது.

 நாம் உண்டு வரும் பழங்கள் எல்லாம் மருத்துவ தன்மை வாய்ந்தது. அதில் மாதுளை ஒரு அற்புத மருத்துவ தன்மை கொண்டது. அதன் பூ பிஞ்சு, காய், இலை, பட்டை, பழம், தோல் முதலிவையும் மருத்துவ தன்மை வாய்ந்தது ஆகும். மாதுளையின் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர், பட்டை ஆகிய அனைத்துப் பாகங்களும் மருத்துவதில் பயன்படுபவை.

மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள் :பூ, பழத்தோல், பட்டை ஆகியவை துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. பழம், இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. பூ, பழத்தோல் ஆகியவை ரத்தப் போக்கைக் கட்டப்படுத்தும். துவர்ப்புச் சுவையைக் கூட்டும். பழம் குளிர்ச்சியை உண்டாக்கும். பூ, பசியைத் தூண்டும். மரப்பட்டை, வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். விதை, ஆண்மையைப் பெருக்கும். குடல் புழுக்களைக் கொல்லும். பல நோய்களையும் கட்டுப்படுத்தி உடலை வளமாக்க மாதுளை பயன்படுகின்றது.மயக்கம், தலைச்சுற்றல், தொண்டை வறட்சி, புளிப்புயேப்பம், வாந்தி தீர  :
மாதுளம் பழச் சாறு, 100 மி.லி. அளவு காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும். பிரயாணத்தின் போது சிலருக்கு வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படலாம். அப்போதும் இதனை சாப்பிட்டு பயன் பெறலாம்.
ரத்த மூலம் கட்டுப்பட :

பூச்சாறு 15 மி.லி. சிறிதளவு கற்கண்டு சேர்த்து, காலையில் மட்டும் குடித்து வர வேண்டும். 2 வாரங்கள் தொடர்ந்து செய்து வரலாம்.

உடல் குளிர்ச்சி பெற  :

ஒரு டம்ளர் அளவு பழச்சாற்றை, தேவையான அளவு கற்கண்டு சேர்த்து, காலையில் குடிக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி நிற்க :

மாதுளம் பழச்சாறு குடிப்பது உடனே பயன் விளைவிக்கும். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு ரத்த சோகையும் ஏற்படக்கூடும். இதற்கும் மாதுளம் பழச்சாறு உகந்தது. நோய்வாய்ப்பட்ட பின்னர் ஏற்படும் உடல் சோர்வைப் போக்க மாதுளம் பழச்சாற்றுடன் சிறிதளவு கல்கண்டு சேர்த்துச் சாப்பிட குணம் பெற முடியும்.

வயிற்றுப் போக்கு, பேதி தீர  :

மாதுளம் பிஞ்சை நன்றாக அரைத்து, பசைபோலச் செய்து கொண்டு, நெல்லிக்காய் அளவு, ஒரு டம்ளர் மோருடன் கலந்து குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 வேளைகள் இவ்வாறு செய்யலாம்.

வாய்ப்புண், தொண்டை ரணம், வலி தீர  :

மாதுளம் பூக்களைச் சேகரித்து, உலர்த்தி, தூள் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை 1/2 தேக்கரண்டி யளவுல், 1/4 லிட்டர் தண்ணீரில் இட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி, வாய் கொப்புளித்து வர வேண்டும்.

மாதுளம் பற்கள்  :

பல்லுக்கு உதாரணமாக மாதுளை விதைகளைக் கூறுவார்கள். நன்கு, முற்றிய மாதுளம் பழத்தை உடைத்தால் உள்ளே முத்துப் பற்கள் போன்று அழகாக அடுக்கப்பட்டிருக்கும் விதைகள் அனைவரையும் அதிசயிக்க வைக்கும். பற்களையும், ஈறுகளையும், பாதுகாக்க மாதுளம் பழம் சாப்பிடவது மிகவும் அவசியமானதாகு

இரண்டு நாடுகள் உருவாக்கப்பட வேண்டும். சி.வி.விக்னேஸ்வரன்

இலங்கையில் இரண்டு நாடுகள் உருவாக்கப்பட வேண்டும் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரு நாடும், இலங்கையின் ஏனைய ஏழு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு இன்னொரு நாடும் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.அதேநேரம் கிழக்கில் முஸ்லிம் வாழும் பிரதேசங்கள் மற்றும் மலையகத் தமிழர் வாழும் பிரதேசங்கள் தனியான சுதந்திர நிர்வாகப் பிரிவுகளாக உருவாக்கப்பட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்குறித்த தனது முன்மொழிவுகளை எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் கையளித்துள்ளார்.வடக்கும், கிழக்கும் தனியான நாடாக வேண்டுமென்று வலியுறுத்தியுள்ள அவர், அப்பிரதேசத்தில் ஆட்சி மொழியாக தமிழ் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், தமக்கு பொலிஸ் அதிகாரமும் வழங்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய கருத்து தற்போது மிண்டும் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி இது நம்தேசம்

மிருகத்தின் ஆட்சி

நிகழ்காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கடைசிகால அடையாளங்கள் வேதவசனத்துடனும், ஊடக ஆதாரத்துடனும் இணைத்து தரப்பட்டுள்ளது. இச்செய்தியானது உங்களுக்கு மிகவும் பிரயோஜனமாகவும், ஆவிக்குரிய ஜீவியத்தில் இன்னும் வளருவதற்கும், சபையானது எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு ஆயத்தப்படவும் உதவும்.கேட்டுப் பயனடையுங்கள்! 
மாரநாதா...! இயேசு சீக்கீரம் வருகிறார்.

பிரெஞ்சு மொழி கற்கலாம் வாங்க


அனைவருக்கும் பிரெஞ்சு பேச வேண்டும்  என ஆசை இருப்பது இயல்பு.  எங்கு கற்போம் எனத் தேடிக் கொண்டிருப்போம்.பேச  முடியவில்லை  என  கவலை  வேண்டாம்  இன்றே கவலையை  விட்டு  விடுங்கள.  உங்களுக்காகவே அருமையான  தளம் உள்ளது .  மிகவும் இலகு தமிழ்மொழி மூலம்  கற்கலாம். சரி பிரெஞ்சு  பேசுங்க 
 இங்கே 
  

பொய்யான தகவலை கூற நிர்ப்பந்திக்கப்பட்டேன். வைத்திய கலாநிதி வரதராஜன்.

வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தங்களால் அமைக்கப்பட்ட தற்காலிக வைத்தியசாலைகளை இனம் கண்டு அவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதை தவிர்க்கும் பொருட்டு செஞ்சிலுவை சர்வதேச அமைப்பினால் இலங்கை இராணுவத்துக்கு வழங்கப்பட்டிருந்த ஜி.பி.எஸ் செய்மதி தொடர்பாடல் வசதிகளை பயன்படுத்தி வேண்டுமென்றே வைத்தியசாலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதை பின்னர் ஐ. நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் இருந்து புரிந்துகொள்ள முடிந்ததாக வைத்திய கலாநிதி வரதராஜா துரைராஜா தெரிவித்திருக்கிறார்.பசி மற்றும் பல வாரங்கள் தொடர்ச்சியாக பணியாற்றியமை காரணமாக பலவீனம் அடைந்திருந்த நிலையில் பதுங்குகுழிக்குள் இருந்து தண்ணீர் அருந்துவதற்காக வெளியே வந்தபோது இராணுவத்தினரின் எறிகணை தாக்குதலில் காயம் அடைந்து பின்னர் அவர்களிடம் சென்ற போது தன்னை வைத்தியசாலையில் அனுமதிக்காமல் தொடர்ந்து 10 நாட்கள் இரகசிய இடம் ஒன்றில் வைத்து எந்த விதமான வெளித்தொடர்புகளும் இன்றி குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்து அச்சுறுத்தி பொய்யான தகவல்களை வெளி உலகத்துக்கு வழங்குமாறு பலவந்தப்படுதியதாகவும் அவர் கூறி இருக்கிறார்.பொஸ்டனில் உள்ள சர்வதேச மன்னிப்பு சபை நியூயோர்க் நகரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒழுங்கு செய்திருந்தத கருத்தரங்கு ஒன்றில் ”திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை மற்றும் இலங்கை யுத்தத்தின் இறுதி நாட்கள்” எனும் தலைப்பில் உரை ஆற்றியபோதே வைத்திய கலாநிதி வரதராஜா இவ்வாறு தெரிவித்தார்.சுமார் 1000 க்கும் அதிகமான அமெரிக்க மாணவர்கள் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்தனர். சிரியா, சவூதி அரேபியா, ஈரான், திபெத் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பிலும் இந்த கருத்தரங்கில் அந்த அந்த நாடுகளை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உரை ஆற்றினர்.இந்த கருத்தரங்கின் முடிவில் அதில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் நியூயோர்க்கில் உள்ள இலங்கை தூதுவராலயம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதுடன் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தினர். இதேபோன்று சிரியா, சீனா, ஈரான் , சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.வன்னியில் யுத்தத்தின் இறுதி நாட்களின் போது இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றியும் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் வழங்கப்படாமலும் எறிகணை மற்றும் விமான குண்டு வீச்சு தாக்குதல்கள் மூலம் எவ்வாறு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பது பற்றியும் வைத்திய கலாநிதி வரதராஜா தனது உரையில் எடுத்துக் கூறினார்.யுத்த சூனிய வலயங்களை பிரகடனப்படுத்தி அங்கு சென்றால் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்துவிட்டு பின்னர் இந்த யுத்த சூனிய வலயங்கள் மீது எறிகணை மற்றும் விமான குண்டு வீச்சு தாக்குதல்களை இலங்கை இராணுவம் செய்ததாக அவர் அங்கு கூறினார்.வேண்டுமென்றே உணவு மற்றும் மருந்துப்பொருட்களை இலங்கை அரசாங்கம் யுத்த பிரதேசத்தில் இருந்த மக்களுக்கு அனுப்பவில்லை என்றும் கூறிய வைத்திய கலாநிதி வரதராஜா இதனை திட்டமிட்ட மனித உரிமை மீறல் என்று விபரித்தார்.தனது உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு 3 மாதங்களுக்கு முறையான சிகிற்சை அளிக்கப்படாமல் தான் அச்சுறுத்தப்பட்டு யுத்தம் பற்றி பொய்யான தகவல்களை வழங்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.இலங்கையில் தற்போது அமைந்துள்ள அரசாங்கம் திருகோணமலையில் மாணவர்களை படுகொலை செய்த குற்றவாளிகளை தண்டிப்பதை இழுத்தடிப்பது மட்டுமன்றி இறுதி யுத்தத்தில் போர் குற்றங்களில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதையும் இழுத்தடிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.இலங்கையின் சட்டங்களின் கீழ் திருகோணமலை மாணவர்களின் படுகொலை சம்பவம் தொடர்பில் வழக்கு நடத்தப்பட முடியும் என்றும் ஆனாலும் சர்வதேச அழுத்தங்கள் கொடுக்கப்பட்டும் அவ்வாறு எதுவும் நடத்தப்படவில்லை என்றும் கோடிட்டு காட்டிய வைத்திய கலாநிதி வரதராஜா திருகோணமலை படுகொலை உட்பட 25 வருட கால யுத்தத்தில் இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு படுகொலை சம்பவங்களை இலங்கையின் நீதித் துறை உள்ளடங்கலான சட்ட முறைமை விசாரணை செய்யாமல் தவிர்த்து வந்தமையே முள்ளிவாய்க்காலில் பாரிய குற்றச் செயல்கள் இடம்பெற காரணமாக அமைந்தது என்றும் கூறினார்.இலங்கையில் தண்டனையில் இருந்து தங்கள் விலக்களிக்கப்பட்டிருந்ததை 2009 இல் பொலிசாரும் இராணுவத்தினரும் நன்கு உணர்ந்திருந்ததாகவும் இதன் காரணமாக தாங்கள் உள்நாட்டு சட்டத்தில் தண்டிக்கப்படமாட்டார்கள் என்று அவர்களுக்கு ஏற்பட்டிருந்த நம்பிக்கையே 2009 ஆம் ஆண்டு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு பாரிய அளவில் படுகொலைகளையும் அழிவையும் மேற்கொள்வதற்கு உந்தியது என்றும் வைத்திய கலாநிதி வரதராஜா அங்கு எடுத்துரைத்தார்.போரில் இடம்பெற்ற குற்றச்செயல்களை விசாரணை செய்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய ஒரு நீதிமன்றத்தை அமைப்பதற்கு ஐ. நா மனித உரிமைகள் சபை பரிந்துரைத்திருக்கின்ற போதிலும் அதனை புதிய அரசாங்கம் நிராகரித்து உள்ளாட்டு நீதிபதிகளை கொண்ட நீதிமன்றமே அமைக்கப்படும் என்று தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டிய வைத்திய கலாநிதி வரதராஜா இதனை புரிந்து கொள்வதற்கு ராக்கட் விஞ்ஞான அறிவு ஒன்றும் தேவை இல்லை என்று கூறினார். ‘நாட்டின் அரசியல் மற்றும் சட்ட முறைமைகள் திருகோணமலையில் 5 மாணவர்களை கொலைசெய்தவர்களை பாதுகாக்க முடியுமானால் நிச்சயமாக யுத்த குற்றவாளிகள் கூட தப்ப முடியும்’ என்று அவர் குறிப்பிட்டார்.
நன்றி இது நம்தேசம்

சிந்தையை குறிவைக்கும் சாத்தான்

சிந்தையை குறிவைக்கும் சாத்தான்
To skip to message 1:32:15 
Opening Prayer 02:26 
Praise and worship 14:17 
Prayer Session 56:07
Child Dedication 2:19:57 
Announcements 2:22:58
Offering song 2:24:39 
Final Blessing 2:28:51

புகைப்படங்களை வீடியோவாக மாற்ற

நம்மிடம் இருக்கும்   புகைப்படங்களை   சீரான இடைவெளியில் பிண்ணணி ஒலியுடன் ஒவ்வொன்றாக காட்டப்பட்டால் நன்றாக இருக்கும்.  புகைப்படங்கள் வரிசையாகவும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு எபெக்ட்டுடன் வந்தால் சிறப்பாக இருக்கும். பல்வேறு புகைப்படங்களை வைத்து அவற்றை வீடியோவாக மாற்ற உதவும் இலவச மென்பொருள் ஒன்று உள்ளது எளிமையாகவும் பல்வேறு வடிவங்களில் வீடியோவினை  இதில் உருவாக்க முடியும்
இங்கே

வீரத்துக்கு பிரபாகரன்

அணு விஞ்ஞானத்துக்கு அப்துல்கலாம் 
இசைக்கு இசைப்புயல் ரகுமான் 
வேதான்களுக்கு வேதாந்திரி
வீரத்துக்கு பிரபாகரன்
ஓட்டை போடு நாம் தமிழருக்கு 
தோற்கடி சந்தர்பவாத அரசியல் மேதைகளை 
தோற்கடி திராவிட தீட்டை
இவ்யுகம்  தமிழனின் யுகமே ....

உன்னை மறவேன்

எனது இதஜம் உன்னிடம் உனது இதஜம் என்னிடம் என் மனம் உன்னையே நாட என் நாவும் உன் பெயர் உச்சரிக்க என்றும் உன்னை மறவேன்

வல்லமையின் வரத்தை தேவனிடம் இருந்து பெறுவது எப்படி ?

வல்லமையின் வரத்தை தேவனிடம் இருந்து  பெறுவது எப்படி 

தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.

சங்கீதம் 8:2  பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.இந்த வாக்குதத்தம் நிறைவேறியது எப்படி ?பொய்யின் ஆவி பொறமை எப்படி வரும் 

இயேசுவின் ரத்தம் படிந்த துணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது


இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்தபின்னர் அவரது உடலைப் பொதிந்து அடக்கம் செய்ததாக கருதப்படும் துணி இத்தாலி நாட்டின் தூரின் நகர தேவாலயத்தில் உள்ளது.
14.3 அடி நீளமும், 3.7 அடி அகலமும் கொண்ட இந்த துணியில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட ஒருவரது உடலின் முன் மற்றும் பின் பகுதி பதிந்துள்ளது. மேலும் ஈட்டியால் குத்தியதில் இயேசுவின் விலாவில் ஏற்பட்ட காயத்தின் வடுவும் இத்துணியில் காணப்படுகிறது.
கடந்த 1988ம் ஆண்டு இந்த துணியின் சிறு பகுதியை ஆய்வு செய்த அமெரிக்க விஞ்ஞானிகள், இது 13ம் நூற்றாண்டளவில் போலியாக தயாரிக்கப்பட்ட ஓவியமாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இத்தாலியின் பதுவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த துணியின் மற்றொரு பகுதியை தற்பொழுது ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். கார்பன் டேட்டிங் உள்பட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவில், இந்த துணி கி.மு.280க்கும் கி.பி.220க்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், துணியில் பதிந்திருப்பது மனித ரத்தம் என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், திடீரென ஏற்பட்ட மின்னல் போன்ற ஒளியால் இந்த ரத்தம் துணியில் படிந்திருக்க வேண்டுமென்றும் பேராசிரியர் பவோலோ தெரிவித்துள்ளார்.
இது எப்படி நிகழ்ந்தது என்பதை தங்களால் விளக்க முடியவில்லை எனவும் ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கிறிஸ்தவ அறிஞர்கள், தூரின் நகரில் உள்ளது இயேசுவின் உடல் அடக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட துணி என்பது உறுதியாகி விட்டது என்றும் இயேசுவின் உயிர்ப்பின்பொழுது, உருவான பேரொளியே இந்த துணியில் அவரது உருவத்தை பதியச் செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிரு

நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிரு

உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல song


உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம் தயை என்னைக் கைவிடல
வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர்
ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
உம்மைத் துதிப்பேன்- நான்
காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர்
உடன்படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர்
வேண்டினோரெல்லாம் விடைபெற்றபோதும்
வேண்டியதெல்லாம் நீர் எனக்குத் தந்தீர்
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர்

புகைப்படங்கள் மற்றவர்களை கவருவதாக இருக்க

அனைவருக்கும் தங்களது புகைப்படங்கள் மற்றவர்களை கவருவதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். 
ஆனால் ஒரு சில படங்கள் அழகு குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட படங்களை அழகுபடுத்த நாம் போட்டோசாப் போன்ற எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும். ஒரு சிலருக்கு போட்டோசாப் மென்பொருளில் எவ்வாறு பணிபுரிவது என்பது தெரியாது. 
அப்படிப்பட்டவர்களுக்கெனவே

உள்ளது தான் போட்டோசைன் என்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானதாக இருக்கும். நம்முடைய நண்பர்களை செல்போன் மூலமாக படம் எடுத்து வைத்திருப்போம் பின்பகுதி(Background) மோசமான நிலையில் இருக்கும். அப்படிப்பட்ட  புகைப்படங்களை இந்த மென்பொருளின் மூலமாக மெறுகேற்ற முடியும்.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த மென்பொருளானது இரண்டு விதமாக உள்ளது மினி வெர்சனாகவும், மற்றொன்று முழுவதுமாகவும் உள்ளது. மினி வெர்சன் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். 
முழு போட்டோசைன் மென்பொருளை பணம் செலுத்தியே பெற வேண்டும். மினிவெர்சனில் வெறும் 237 டெம்ப்ளேட்கள் மட்டுமே உள்ளது. ஆனால் முழு போட்டோசைன் மென்பொருளில் 700 க்கும் மேற்ப்பட்ட டெம்ப்ளேட்கள் உள்ளது. 

இந்த மென்பொருளானது போட்டோக்களை அழகுபடுத்த பயன்படுகிறது. ஒன்றுக்கும் மேற்ப்பட்ட புகைப்படங்களை ஒண்றினைக்கவும் இந்த புகைப்படம் உதவுகிறது. நண்பர்களின் குழு புகைப்படத்தையும் இந்த மென்பொருள் மூலமாக உருவாக்க முடியும்

அழகே தனிடா

உலகின்  ௬ரை வானம் 
உலகின் மெத்தை முகில்கள் 
இரவில் ஒளி சந்திரன் 
இரவில் வர்ண விளக்கு நட்ச்சந்திரம்
அடடா இயற்கையின் அழகே தனிடா

எழமுடியும்

வட்ட வண்ண நிலவே 
மூவைந்து நாட்களில் தேய்கிறாய் 
மூவைந்து நாட்களில் வளருகிறாய்
வீழ்ந்தாலும் எழமுடியும் என
நம்பிக்கை ஊட்டுகிறாய்
எம்மை கொள்ளை கொள்கிறாய்

பூக்கும் ரோஜா நீ

முள்ளில்  பூக்கும் ரோஜா நீ 
உன்னை அள்ளிப் பறித்தேன் 
சொல்ல முடியா  அன்பில். 
என் அன்புக்கு வானம் இல்லை 
உன் அன்புக்கு எல்லை இல்லை 
அன்பின் நிழலில் இன்பத்தில்
இணையும் எம் இதயம்

பெருமை பெற

பெண்ணினத்தை அவமதித்துப் 
பெருமை பெற நினைத்தவர்கள் 
பெரும்பாவச் சுமையேற்றுப் 
பெற்ற துன்பம் உலகறியும் 
எண்ணி எண்ணிப் பெண் 
பெருமை ஏற்றிப் புகழ்ந்தே எழுதி
 இன்பமுற்ற்றார் இவ்வுலகில் 
இறைவனைப்போல் என்றும்முள்ளார் 

உங்கள் வலைப்பூ ஐபேட்டில் சரியாகத் தெரிகிறதா?

ஐபேட்டின் வேகமான வளர்ச்சி தற்போது அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரி இருந்து வரும் நிலையில் நம் இணையதளம் ஐபேட்டில் சரியாகத் தெரிகிறதா என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
நம் இணையதளம் பல சிறப்பம்சம் கொண்டதாக இருந்தாலும் மிக முக்கியமாக அனைத்து ஐபேட்களிலும் சரியாக தெரிய வேண்டும். எந்தப் பிழைச் செய்தியும் கொடுக்காமல் தெரிகிறதா என்று ஐபேட் இல்லாமலே ஓன்லைன் மூலம் தெரிந்து கொள்வதற்கு வசதியாக ஒரு தளம் உள்ளது.
இந்தத்தளத்திற்கு சென்று அதன் கட்டத்திற்குள் நம் இணையதள முகவரியை கொடுத்து Enter பொத்தானை சொடுக்கினால் போதும். அடுத்து வரும் திரையில் நம் இணையதளம் ஐபேட்டில் எப்படித் தெரியுமோ அப்படி தெரியும்.
இதிலிருந்து நம் தளம் ஐபேட்டில்
சரியாகத் தெரிகின்றதா என்று எளிதாக சோதித்து பார்த்துக் கொள்ளலாம். எந்த பயனாளர் கணக்கும், எந்த விளம்பரமும் இல்லாமல் தெரியும் இந்தத் தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இங்கே